ஆஷஸ் ஆரம்பம் 

ஆஷஸ் தொடரைக் கைப்பற்ற இங்கிலாந்து,அவுஸ்ரேலிய அணிகள் வரிந்து கட்டிக்கொண்டுள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது. இங்கிலாந்து அவுஸ்ரேலிய அணிகளிடையே கடந்த 122 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நடந்து வரும் ஆஷஸ் தொடரில் அவுஸ்ரேலிய அணியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது.கடைசியாக கடந்த 2006-07இல் நடந்த ஆஷஸ் கோப்பையை 5-0 என்ற கணக்கில் முழுமையாக அவுஸ்ரேலியா கைப்பற்றி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது.
கடந்த முறை ஆஷஸ் தொடரில் விளையாடிய அவுஸ்ரேலிய வீரர்களில் கில்கிறிஸ்ட்,ஹைடன், லாங்கர், மார்ட்டின், வார்னே,மெக்ராத் ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் அவுஸ்ரேலிய அணி அனுபவம் குறைந்த அணியாகவே தெரிகிறது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை சொந்த மண்ணில் விளையாடுவது அதற்கு கூடுதல் பலமென்றாலும் அதுவே நெருக்கடியாகவும் கருதப்படுகிறது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை சொந்த மண்ணில் விளையாடுவது அதற்கு கூடுதல் பலமென்றாலும் அதுவே நெருக்கடியாகவும் கருதப்படுகிறது. இம்முறை ஆண்ட்ரூ ஸ்டிராஸ் தலைமையில் களம் இறங்கும் இங்கிலாந்து அணியில்,பீட்டர்சன்,பிளின்டாஃப் இருவரும் நம்பிக்கை நட்சத்திரங்கள்.
கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகள் மோதும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. தெரியாதோர் தெரிந்து கொள்ளுங்கள்................
ஆஷஸ் வரலாறு:1882இல் லண்டன் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியை மறக்க முடியாது. இதில் அசுர வேகத்தில் பந்துவீசிய பிரட் ஸ்போபர்த் 14 விக்கெட் வீழ்த்த அவுஸ்ரேலிய அணி, இங்கிலாந்தை 7ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இது குறித்து லண்டன் "ஸ்போர்ட்டிங் டைம்ஸ்' பத்திரிகையில் ரெஜினால்டு ஷர்லி புரூக்ஸ் மிகவும் கேலியாக விமர்சனக் கட்டுரை எழுதினார்.அதில் "1882- ஆக- 29ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணி மரணம் அடைந்து விட்டது.இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ணியின் உடல் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் அவுஸ்ரேலியாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது என கண்ணீர் அஞ்சலி போல குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் 1882-83இ ல் இங்கிலாந்து அணி,அவுஸ்ரேலியா சென்றது.அப்போது இழந்த சாம்பலை(ஆஷஸ்) இங்கிலாந்து அணி மீட்குமா என்று ஊடகங்களில்
செய்திகள் வெளியாயின. இம்முறை இவோ பிளிக் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை 2-1 என வென்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து மெல்பேர்னில் இருந்த சில பெண்கள் சேர்ந்து மூன்றாம் டெஸ்டில் பயன்படுத்திய "பெயில்சை' எரித்து அதன் சாம்பலை சுமார் 6 அங்குல உயரமுள்ள செம்பழுப்புநிற மண்ணால் செய்யப்பட்ட கலசத்தில் போட்டு தலைவர் பிளிக்கிடம் கொடுத்தனர்.எரிக்கப்பட்ட பொருள் குறித்து பல்வேறு செய்திகள் கூறப்படுகிறது.சிலர் "பெயில்ஸ்' அல்ல பந்து என்கின்றனர். ஒரு பெண்ணின் முகத்தை மூடியிருந்த துணி எரிக்கப்பட்டு அதன் சாம்பல் தான் கலசத்தில் உள்ளதாக தலைவர் பிளிக்கின் மனைவி குறிப்பிட்டுள்ளார். தற்போது லார்ட்சில் உள்ள மெரில்போன் கிரிக்கெட் கழக
அருங்காட்சியகத்தில் கோப்பை போன்ற அந்த சிறிய ஆஷஸ் கலசம் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது. இதற்குப் பின் நடந்த இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகள் ஆஷஸ் தொடர் என அழைக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடராக நடத்தப்படுகிறது.
என்ன இவ்வளவும் வாசித்து களைப்பாக இருக்கிறதா....அவ்வளவும்தான். ஆஷஸ் தொடரில் முடி சூடப்போவது யார்? சக்தி fm கேளுங்கள்.....
0 comments:
Post a Comment