டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான டெஸ்ட் தொடர் ஒன்றை முழுமையாக அந்நிய மண்ணில் பதிவு செய்தது பங்களாதேஷ்.
இந்தப் போட்டித் தொடரில் வழமையான மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்கள் விளையாடவில்லை. மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய பண மீதி கொடுக்கப்படாமல் உள்ளதால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாதென மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கூறியது. இதனால் மேற்கிந்தியத்தீவுகள்அணி முற்றிலும் புதிய வீரர்களுடன் களமிறங்கியது. அனுபவம் இல்லாத இந்த வீரர்கள் பங்களாதேஷ் பந்துவீச்சில் சரிவு கண்டனர்.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 95 ஓட்டங்களாலும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்4 விக்கெட்டினாலும் வெற்றி பெற்று 2-0 என்ற அடிப்படையில் தொடரைத் தன் வசப்படுத்தி அந்நிய மண்ணில் சாதனை படைத்தது பங்களாதேஷ்.
பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாகவும் போட்டித் தொடரின் நாயகனாகவும் தெரிவானார். இந்தத் தொடரில் ஷகிப் 159 ஓட்டங்களையும் 13 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார்.
இந்தத் தொடர் வெற்றிக்கு,மேற்கிந்தியத்தீவுகள் அணியின் விளையாடாத வீரர்களுக்குத்தான் பங்களாதேஷ் நன்றி கூற வேண்டும். சில நேரம் போட்டிகளைப் பகிஸ்கரித்த வீரர்கள் விளையாடியிருந்தால் பங்களாதேஷ் அணியின் நிலைமை என்ன ஆகியிருக்கும்......
பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்துள்ள மேற்கிந்தியத்தீவுகள் இனி வரும் போட்டிகளில் முழுமையான அணியாகக் களமிறங்கி வெற்றிகளைப் பெறுமா?
Tuesday, July 21, 2009
மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் எதிர்காலம் ?
0 comments:
Post a Comment