அப்பிளில் மெழுகு

அப்பிள், மனிதனுக்கு நல்ல ஊடச்சத்துக்களைக் கொடுப்பதாக அறிந்திருக்கிறோம். இன்று அதே அப்பிள் மூலம் நோய் வரும் என்று பலரும் பேசும் நிலை. காரணம் என்னவென்றால் மெழுகு தடவிய அப்பிள் கடைகளில் விற்பனையாவதாக கூறப்படுகிறது.
நானும் இதை ஆரம்பத்தில் நம்பவில்லை. கடந்த வாரம் ஒரு அப்பிளில் எனது பார்வை பட்டது. அதை எடுத்து தோலின் மேற்பகுதியை சுரண்டிப்பார்ததும் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. அப்பிளின் மேற்பகுதியில் இருந்த மெழுகு என் விரல்களில். புரிந்தது உண்மை. அந்தத் துகள்களை எரித்துப் பார்த்தல் எரிகிறது.
இப்படியான அப்பிளை உண்டு வீணான நோயினை வருந்தி அழைக்கவேண்டுமா நீங்களும் அப்பிளை வாங்கிப் பரீட்சித்துப் பாருங்கள். அதன் பின் சாப்பிடுங்கள்.
0 comments:
Post a Comment