
நிலவு, இது கவிஞர்களின் உன்னதமான கருப்பொருள். தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகானது நிலவு. காதலன் காதலியை வர்ணிக்கும்போது நிலவைத்தான் துணைக்கு அழைக்கிறான். இந்த நிலவைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் இல்லை என்றே கூறலாம்.
உன்னதமான இந்த நிலவில் மனிதன் தடம் பதித்து 40 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் 40 வருடங்களுக்கு முன்னர் நிலவில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினர் நிலவில் தடம் பதித்த பெருமையைப் பெற்றனர். நிலவைப் பார்த்து கவிதை புனைந்த கவிஞர்கள் முதல் அனைவரும் வியந்தனர். கவிஞர்கள் சில நேரம் சென்றிருந்தால் நிலவைப் பற்றிய கவிதைகள் இப்போது வருமா என்பது எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான்.
அறிவியல் துறையின் முன்னேற்றத்தில் சாதனைக்குரிய விடயமாக மனிதனின் நிலவுப் பயணம் அமைந்தது.
விண்வெளிக்குச் செல்ல பல தடைகள் இருந்தபோதும் அவற்றைக் கடந்து அப்பல்லோ-11, 16-07-1969 இல் தனது பயணத்தை ஆம்ஸ்ட்ராங் குழுவினருடன் ஆரம்பித்தது. ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை தனதாக்கினார். ஆம்ஸ்ட்ராங் குழுவினர் நிலவில் அமெரிக்கக் கொடியை நாட்டி புகைப்படங்களையும் மண்ணையும் எடுத்துக் கொண்டே பூமிக்குப் புறப்பட்டனர்.
நிலவைப் பார்த்துக் கதை பேசிக்கொண்டிருந்த மனிதன் நிலவில் தடம் பதித்து சாதனை படைத்தான். இந்த சாதனை படைக்கப்பட்டு 40 வருடங்கள் கடந்துள்ளன.
நிலவைப் பார்த்து கவிஞர்கள் பாடியதை பலவாறு கேட்டோம். நிலவு மனிதனைப் பார்த்துப் பாடியிருந்தால் என்ன பாடியிருக்கும்....
என்ன உங்களுக்கும் நிலவுக்குப் போக ஆசையா....
தனிமையாக இருந்து நிலவை உற்றுப் பாருங்கள்.... அதில் சில நேரம் உங்கள் அன்பிட்குரியவர் தென்படலாம். இப்போது சொல்லுங்கள் நிலவுக்குப் போக ஆசையா?
0 comments:
Post a Comment