2011உலகக் கிண்ணக் கிரிக்கெட் சின்னம் "லோகோ" அறிமுக விழா 

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் 2011ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை,பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானிலும் 14 போட்டிகள் நடைபெறவிருந்தபோதிலும் பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறாது என கூறியது ஐ.சி.சி.
இது இப்படி இருக்க உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா மும்பையில் நடந்தது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1975 மற்றும் 1979 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் கிளைவ் லாயிட்,1983 இல் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் பல்வீந்தர் சிங் சாந்து, வெங்சர்க்கார்,1996 இல் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்ற, இறுதிப் போட்டியின் நாயகன் அரவிந்த டி சில்வா,1999 மற்றும் 2003 இல் கிண்ணத்தை வென்ற அவுஸ்ரேலிய அணியில் இடம்பெற்ற மைக்கேல் பெவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
14 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானில் போட்டிகள் இல்லையென்பதால் மற்றைய மூன்று நாடுகளுக்கும் போட்டிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
2011 இல் உலகக் கிண்ணம் ஆசியா வசமாகுமா.....
0 comments:
Post a Comment