Pages

Friday, July 24, 2009

இலங்கையிடம் பணிந்தது பாகிஸ்தான்

இலங்கை அணித் தலைவர் குமார் சங்ககாரவின் சதத்துடன் பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியற்ற நிலையில் முடிவடைந்துள்ளது. கடைசிவரை போராடிய பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் மூலம் இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் வென்று,பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக சாதித்துள்ளது.

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 299 ஓட்டங்களையும் இலங்கை 233 ஓட்டங்களையும் எடுத்தன. 2 ஆவது இன்னிங்சில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளையிழந்து 425 ஓட்டங்களை எடுத்து தமது துடுப்பாட்டத்தை நிறுத்தி இலங்கையணிக்கு 492 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 391 ஓட்டங்கள் எடுத்தநிலையில் இரு அணித்தலைவர்களும் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

சங்ககார சுமார் 7 மணி நேரம் நிலைத்து நின்று டெஸ்ட் அரங்கில் தனது 19ஆவது சதமடித்து அசத்தினார். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சொந்த மண்ணில் முதன்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

இலங்கைமண்ணில்,பாகிஸ்தான் அணி மூன்று முறை (1994,2000,2005/06) டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இரண்டு முறை (1985/86,1996/97) டெஸ்ட் தொடர் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளது.

ஆட்டநாயகனாக இலங்கை அணித்தலைவர் சங்ககாரவும் தொடர் நாயகனாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் குலசேகரவும் தெரிவாகினர். இந்த டெஸ்ட் போட்டியுடன் சமிந்த வாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இலங்கையணிக்கு வாழ்த்துக்கள்......

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates