Pages

Thursday, July 30, 2009

முரளியிடம் சுருண்ட பாகிஸ்தான் வழமையாகப் பந்துவீச்சில் அசத்தும் சுழல் மன்னன் முரளிதரன் இன்றைய பாகிஸ்தானுடனான போட்டியில் தனது ஆக்ரோஷமான அதிரடியை தக்க தருணத்தில் வெளிப்படுத்தினார். இவரது துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகியவற்றின் பங்களிப்புடன் அபாரமான வெற்றியைப் பெற்றது இலங்கை.


தம்புள்ளையில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. 6 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது இலங்கை அணி. அண்மையில் அணியில் இடம் பிடித்த அஞ்சலோ மத்தியுஸ் 43 ஓட்டங்களைப் பெற, முரளி அதிரடியாக 15 பந்துகளில் 32ஓட்டங்களைப் பெற இலங்கை அணி50 ஓவர்களில் 232ஓட்டங்களைப் பெற்றது.

233ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் சகல விக்கெட்டுகளையும் இழந்து 196ஓட்டங்களை மட்டுமே பெற்று 36ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் முரளி2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரே போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டியின் பின் கருத்துக் கூறியமுரளி 2010ஆம் ஆண்டுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 127 டெஸ்ட் போட்டிகளில் 770 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முரளி, 330சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 507விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
முரளியின் சாதனைகள் தொடரட்டும் ....

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates