
ஜூலை-5.....இது ரோஜர்ஃபெடரர் எழுச்சி கொண்ட நாள்......
தனது நீண்ட நாள் டென்னிஸ் கனவை விம்பிள்டன் டென்னிஸ் சாதித்துக் காட்டினார். விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் அன்டி ரொடிக்கை 5-7,7-6,7- 6,3- 6,16-14 என்ற செட்களில் போராடி வீழ்த்தி 15ஆவது கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை சுவீகரித்து சாம்ப்ராஸ் முன்னிலையில் உலக சாதனை புரிந்தார்.பீட் சாம்ப்ராஸ் இதற்கு முன்னர் அதிக பட்சமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலக சாதனை படைத்திருந்தார். இந்தப் போட்டியைக் காண வந்த சாம்ப்ராஸ் தனது சாதனையை ஃபெடரர் முறியடிப்பதை நேரில் கண்டு ரசித்தார்.
கடைசி செட் ஆட்டம் இதுவரையிலான விம்பிள்டன் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நடைபெற்றதாக அமைந்தது. இந்த இறுதிப்போட்டி 4மணி 16நிமிடம் நீடித்து டென்னிஸ் ரசிகர்களுக்கு மிகவும் விருந்து படைத்தது.
இந்த வெற்றி மூலம் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலிடமிருந்து உலகின் நம்பர்-1 வீரர் என்ற அந்தஸ்தையும் ஃபெடரர் பெற்றார்.
இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை (2003 அமெரிக்க பகிரங்க பட்டம்) வென்றுள்ள ரொடிக் 2004,2005 ஆகிய ஆண்டுகளில் நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியிலும் ஃபெடரரிடம் தோல்வியுற்றார்.
பெடரரின் சாதனை சில:
15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றி உலக சாதனை.
6ஆவது விம்பிள்டன் பட்டம்.
விம்பிள்டன் டென்னிசில் தொடர்ந்து ஏழாவது முறையாக இறுதிக்கு முன்னேறிய முதல் வீரர்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 20ஆவது முறையாக (விம்பிள்டன்-7,அமெரிக்க-5,ஆஸி-4,பிரெஞ்ச்-4) இறுதிக்கு முன்னேறியமை.
இப்படி சாதனைகள் பல பல.....
விம்பிள்டன் பட்டம் வென்று உலக அளவில் தனது ரசிகர்களை ஆனந்தத் தாண்டவமாட வைத்துள்ள ஃபெடரர் தான் இன்னும் சாம்பியன் தான்,இன்னும் தன் பயணம் முடியவில்லை என்பதை இன்னும் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்.
தன் சாதனைகளைக் குறிப்பிடும் பெடரர் வாழ்க்கையில் ஒரு முறையாவது விம்பிள்டன் சாம்பியனாக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு,ஆனால் 6 முறை வென்றுள்ளேன்."நான் என்னால் சிந்திக்க முடியாத அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன்".அனைத்து சாதனைகளையும் முறியடிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததில்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் வரலாற்றில் வேறு யாருக்கும் இல்லாத தகுதியும் திறமையும் இவரிடம் உள்ளது. தற்போது அவரின் வயது 27. தற்போதைய நிலையில் தன் ஆட்டத்தை இன்னும் நிலை நிறுத்தினால்,டென்னிஸ் உலகம் இதுவரை கற்பனை செய்திட முடியாத உயரத்தை தொடுவார் இது எனது மனதில் தோன்றும் கருத்து.
சாதனை நாயகனே உனக்கு இனிய வாழ்த்துக்கள்...தொடரட்டும் சாதனைகள்.....
0 comments:
Post a Comment