சொந்த மண்ணில் தடுமாறும் மேற்கிந்தியத்தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகளில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியிருந்த பங்களாதேஷ், இப்போது ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.
இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என்ற அடிப்படையில் தொடரை வென்றுள்ளது.
டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுள்ள நாட்டுக்கெதிராக ஒரு நாள் போட்டித் தொடர் ஒன்றை பங்களாதேஷ் வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை 200 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பங்களாதேஷ், நேற்று நடந்த போட்டியில்தான் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்ற முதல் ஒரு நாள் போட்டித் தொடர் இதுவே.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கும் இடையிலான பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்போதைக்கு இது தீராது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ள பங்களாதேஷ் அணிக்கு வாழ்த்துக்கள்.
சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்த வீரர்கள் அடுத்த போட்டியிலும் வெற்றி பெறுவார்கள் என்பது எனது கருத்து.
0 comments:
Post a Comment