
100 ஆவது பதிவாக பதிவிடும் இந்தப் பதிவு என்றும் மறக்க முடியாத ஒரு பதிவு.தொடர்ச்சியாக எனது பதிவுகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் இன்னும் பல பதிவுகளைப் பதிவிட உந்துதலாக இருக்கிறது. இந்தப் பதிவில் இன்னுமொரு மகிழ்ச்சி எனக்கு ..........
வலைப்பதிவுகளில் தற்போது உலவிவரும் "சுவாரஷ்யபதிவர் விருது" விடிவெள்ளி என்ற வலைப் பூவை வைத்திருக்கும் பதிவுலக நண்பரான கார்த்திகன் கோபாலசிங்கம் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது.விருதுகள் உன்னதமானது. ஒரு படைப்பாளியின் அல்லது ஒரு கலைஞனின் உள்ளத்து உணர்வுகளை இன்னொரு கலைஞனால்தான் புரிந்துகொள்ள முடியும்.அந்த வகையில் நான் தரும் பதிவுகளை வாசித்து அதற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி.
தனது வாழ்வில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகளை பதிவுகளாகத் தரும் கார்த்திகன் கோபாலசிங்கம் தனக்குக் கிடைத்த சுவாரஷ்ய பதிவர் விருதை இருவருக்குக் கொடுத்துள்ளார்.அந்த விருது கிடைத்த இருவரில் நானும் ஒருவன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றிகார்த்திகன் கோபாலசிங்கம். இவர் தனது http://www.vidivu-carthi.blogspot.com/ இல் எனக்கு இந்தசுவாரஷ்ய பதிவர் விருது தருவது பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..... எனக்கு தரப்பட்ட இந்த விருதை 6பேருக்கு அளிக்கவேண்டுமாம். இருந்தாலும் இருவருக்கு அளிக்கின்றேன். முதலாமர் ஹிசாம் அண்ணா. அடுத்தவர் மயூரன் அண்ணா.சக்திFM வானொலியின் நீண்டகால அறிவிப்பாளர். வலைஉலகத்திற்கு புதியவர். MAYURAN என்ற வலைப்பதிவை எழுதி வருபவர். உலகத்தில் நடக்கும் எல்லா முக்கிய விசயத்தையும் முந்திக்கொண்டு பதிவிடுபவர்.சின்னச் சின்னதாக அளவான பதிவுகளில் அசத்துபவர். அடிக்கடி எழுதும் இவருக்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறதோ?
நீங்கள் குறிபிட்டது உண்மைதான் நண்பரே.. நேரம் கிடைப்பது அரிது அப்படிக் கிடைக்கும் நேரத்தில்தான் பதிவிடுகிறேன். இன்னும் பதிவுகள் தொடரும்.
இதே நேரம் எனது பதிவுகளுக்கு ஊக்கம் தந்த சிலரைப் பற்றியும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்......
ஒலிபரப்புத்துறையில் பணிபுரிவோர்க்கு ஓய்வு நேரம் கிடைப்பது அரிது. அப்படி ஓய்வு நேரம் கிடைக்கும்போது பயனுள்ள வகையில் பலர் தமது ஆளுமைகளை தமது பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ஆரம்பத்தில் எனக்கும் வலைப்பதிவில் பதிவுகளையிட ஆர்வம் இருந்தது.ஆனால் நேரம் கிடைப்பதில்லை.
வலைப்பதிவில்அதிக ஆர்வம் கொண்ட எனது சகஅறிவிப்பாளரும் சகோதரியுமான டயானாவின்(உங்களால் நல்ல பதிவுகளைதர முடியும் அண்ணா என்று கூறிய அந்த) வார்த்தைகளால் எனது பதிவுகள் தொடர்ந்தன. நன்றி டயானா. இதை விட சக அறிவிப்பாளர்களான கஜமுகன் (இன்னும் நல்லா எழுதுங்கையா என அடிக்கடி கூறும் கணாதிபன்,குணா,ராஜ்மோகன் ஆரம்பத்தில்wordpress இல் பதிவிடும்போது உதவிய ஹோஷியா,ஆரணி மற்றும் பிரஜீவ்,இதைவிட இணைய நண்பர்கள் ஆகியோரின் வாழ்த்துக்கள்,கருத்துக்கள்தான் இந்த 100 பதிவுகளுக்கு படிக்கற்களாக அமைந்தது எனலாம்.
அனைவருக்கும் எனது நன்றிகள். பதிவுகள் தொடரும் .உங்கள் கருத்துக்கள் எனது பதிவுகளுக்கு பக்கபலமாக அமையட்டும்....
சதமடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.மீண்டும் இன்னொரு பதிவில் சிந்திப்போம் ......
3 comments:
வாழ்த்துக்கள் அண்ணா.... இன்னும் இன்னும் எழுதித் தள்ளுங்க.....
வாழ்த்துக்கள் மயூரன்...நல்லா இ௫க்கு உங்கள் பணி மேலும் தொடரட்டும்...
நன்றி நண்பர்களே. உங்கள் கருத்துக்கள் என்றும் தேவை.
Post a Comment