ஜாக்சனின் பிரியாவிடை

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்கி விடை கொடுக்க பல்லாயிரக்கணக்கானோரின் நேரடி அஞ்சலியுடன் பாப் உலகின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் நேற்று இரவு பிரியாவிடை பெற்றார்.
இதுவரை உலகில் யாருடைய இறுதிச் சடங்கும் இந்த அளவுக்குப் பிரமாண்டமானதாக இருந்திருக்க முடியாதென்று கூறுமளவுக்கு மிகப் பிரமாண்டமாக ஜாக்சனின் இசையை சுவாசித்தபடி அவருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர் அவரது ரசிகர்கள்.
ஜூன் 25ஆம் தேதி மரணமடைந்த ஜாக்சனின் உடல் தங்க முலாம் பூசப்பட்ட பிரேதப் பெட்டியில் வைக்கப்பட்டு பாரஸ்ட் லான் ஹில்ஸ் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாக மட்டும் நடத்தப்பட்டதால் குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை.அதன் பின்னர் மைக்கேல் ஜாக்சனின் கடைசி விருப்பப்படி அவரது நினைவு நிகழ்ச்சி பிரபலமான ஸ்டேபிள்ஸ் மையத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 20 ஆயிரம் பேர் இந்த நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இசையுலகைச் சேர்ந்த பாரி கோர்டி,கூடைப்பந்தாட்ட வீரர்கள் மாஜிக் ஜான்சன்,கோபே பிரையன்ட்,ஜெனிபர் ஹட்சன், ஜான் மேயர் என பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.ஜாக்சனின் மகள் பாரீஸ் தனது தந்தை குறித்து பேசி முடித்ததும் அடக்க முடியாமல் கதறி அழுதார். அதேபோல ஜாக்சனின் சகோதரரான ஜெர்மைன் ஜாக்சனும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்மைல் என்கிற பாடலைப் பாடினார்.உலகம் முழுவதும் ஜாக்சனின் நினைவு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யபப்ட்டது. மொத்தம் 16 டிவி நிறுவனங்கள் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.
ரசிகர்கள் கண்ணீர் மல்கி விடை கொடுக்க பூவுலகிலிருந்து விடை பெற்றார் ஜாக்சன்.......ஜாக்சன் மறைந்தாலும் அவரது இசை உலகெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்...............
0 comments:
Post a Comment