
அசத்தலான பந்து வீச்சின் மூலம் இலங்கை அணி இரண்டாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி தொடரை வென்றது. நுவன் குலசேகர, ரங்கன ஹேரத் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் சுருண்ட பாகிஸ்தான் இலங்கை மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 90 ஓட்டங்களும் இலங்கை அணி 240 ஓட்டங்களும் எடுத்தது.இரண்டாம் நாள்ஆட்டநேர இறுதியில் பாகிஸ்தான் அணி,இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பவாத் ஆலம் -102,யூனிஸ் கான்-35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பித்தபோது ஆலம், யூனிஸ்கான் ஜோடி வேகமாக ஓட்டங்களைக் குவித்தது. இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்காக 200 ஓட்டங்களை சேர்த்த நிலையில்,யூனிஸ்கான் (82)சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். பாகிஸ்தானின் அறிமுக வீரரான பவாத் ஆலம் 168 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை தாண்டவில்லை.
ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 285ஓட்டங்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் கடைசி 8 விக்கெட்டுகளை 35ஓட்டங்களுக்கு இழந்தது. பாகிஸ்தான் 2ஆம் இன்னிங்சில் 320 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
171ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வேகமாக ஓட்டங்களைக் குவித்து 3ஆம் நாளிலே 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு சாதனை படைத்தது குமார் சங்ககார தலைமையிலான இலங்கை அணி.
பாகிஸ்தானின் பவாத் ஆலம் இலங்கையின் குலசேகர ஆகியோர் போட்டி நாயகன் விருதைப் பெற்றனர்.
அடுத்த போட்டியில் முரளி களமிறங்கினால் இன்னும் போட்டி சூடு பிடிக்கும். இந்தப் போட்டி எத்தனை நாட்களுக்குள் முடியப்போகிறதோ.............
0 comments:
Post a Comment