ஜக்சனின் மூக்கு எங்கே?

மைக்கேல் ஜக்சன் உயிருடன் இருந்த நாட்களில் பேசப்பட்டதை விட,அவர் இறந்த பிறகு அதிகம் இப்போது பேசப்படுகிறார். நாளுக்கு நாள் புதிய புதிய பரபரப்புகள்.
ஜக்சன் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை.கொலை செய்யப்பட்டுள்ளார் என ஜக்சனின் சகோதரி பரபரப்புக்குற்றச்சாட்டைக் கூறி சில நாட்களில் இப்போது இன்னும் ஒரு பரபரப்பு. ஜக்சன் மரணம் அடைந்த பிறகு அவரது முகத்தில் மூக்கு இருக்கவில்லையாம். அதற்கு பதிலாக 2 துவாரங்கள் மட்டுமே இருந்தன என்பதே அந்தப் பரபரப்பு.
ஜக்சன் பிரபலம் அடையத் தொடங்கியதும் தனது உருவத்தை மாற்றி கொள்ள 6 தடவை அறுவைச் சிகிச்சை செய்து தனது முகஅமைப்பை மாற்றினார். தனது மூக்கு தந்தையின் மூக்கை போல் பெரிதாக இருப்பதாக கருதி மூக்கை சிறியதாக மாற்ற அறுவைச் சிகிச்சை செய்து தனது மூக்கை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக சிறிய செயற்கை மூக்கைப் பொருத்தினார். இது சிலருக்குத் தெரியும். ஆனால் ஜக்சன் இறந்த பிறகு அவரது உடலில் இருந்த செயற்கை மூக்கைக் காணவில்லையென்று அவரது வீட்டு வேலைக்காரன் கூறியுள்ளது புதிய பரபரப்பாக இப்போது பேசப்படுகிறது. மூக்கைப் போல அவரது உடலில் பொருத்திய செயற்கை உறுப்புகளும் மாயமாம்.
என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா? ஜக்சனுக்குத்தான் உண்மை தெரியும். இறந்தும் இன்னும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறார் ஜக்சன்.
நாளை என்ன பரபரப்போ...........
2 comments:
enna kodumai ithu....
Ithuthaan puthu ulagam..
Post a Comment