என்றும் எம்முடன் 'கவியரசர்'
தமிழர்கள் மரபில் எத்தனையோ கவிஞர்கள் தோன்றி மறைந்திருக்கின்றர்கள்.ஆனாலும் தமிழர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய எழுத்துக்களை,பாடல்களை,படைப்புகளை வழங்கியவர்'கவியரசர்' கண்ணதாசன்.
உலகத் தமிழர்களின் அகங்களில் அமர்ந்திருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 82 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
தமிழுலகில் ஆரம்பித்து திரையுலகில் புகுந்து மக்கள் மனங்களை வென்ற ஒரே கவிஞர் 'கவியரசர்' கண்ணதாசன். இவரின் வருகைக்குப் பின்னர் தமிழ்த் திரையுலகில் பாடல்கள் சிறப்புப் பெற்றன.
தனது சிறந்த சொல்லாட்சி,உவமை,சந்தங்கள்,இலக்கிய நயம்,பொருள் நயம் ஆகியவற்றால் சுமார் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தந்தவர் இவர். இன்பம்,துன்பம்,காதல்,பிரிவு,கடமை,சோதனகள்,வேதனைகள் என பல பொருளில் பாடல்களை தந்தமை கண்ணதாசனின் சிறப்பு.
இவரது முதற் பாடல்: 'கன்னியின் காதலி' திரைப்படத்தில் 'கலங்காதிரு மனமே...'
இறுதிப் பாடல் :மூன்றாம் பிறை திரைப்படத்தில் 'கண்ணே கலை மானே....'
கவியரசன் கண்ணதாசன் மறைந்தாலும் அவர் தந்த தமிழ் நயமும் இசை நயமும் திரையிசை வரலாற்றில் தருவது ஒரு தனி நயம்!
0 comments:
Post a Comment