
இந்தியாவின் தேனி மாவட்டம் பண்ணப்புரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்ற ராசையா. ஜூன் மாதம் 2ஆம் திகதி 1943 ஆம் ஆண்டு பிறந்தார்.இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்று,இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்ந்து வருகிறார் ராஜா.
இளையராஜாவின் இசையில் வெளிவந்த முதல் படம் அன்னக்கிளி.
பல்வேறு மொழி படங்களிலும் இவரது பங்களிப்பு அளப்பரியது.
பல பாடகர்களை, பாடலாசிரியர்களை, கலைஞர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.
கிராமத்து மண் வாசனையை திரையிசையில் வீசச் செய்தார் இளையராஜா.
மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் இசைஞானி.
1) 1985இல் - சாகர சங்கமம் - தெலுங்கு
2) 1987இல் - சிந்து பைரவி - தமிழ்
3) 1989இல் - ருத்ர வீணை - தெலுங்கு
இவருக்கு மட்டும் தேசிய விருதுகள் கிடைக்கவில்லை. இவர் அறிமுகப்படுத்திய பல பாடக பாடகிகளும் தேசிய விருதுகளைப் பல்வேறு காலகட்டத்தில் பெற்றுள்ளனர்.
சர்வதேச அளவில் சிம்பனி இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான். இது மட்டுமா....இல்லை....
மணிவாசகர் தந்த திருவாசகத்திற்கு இசை கொடுத்து உயிர் கொடுத்த இசை மேதை இவர். இசையமைப்புடன் மட்டும் நின்றுவிடவில்லை ராஜா............
இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் ஆவார். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இது மட்டுமா பல கவிதைப் புத்தகங்களையும் தந்துள்ளார். பல இசைத் தொகுப்புக்களையும் தந்துள்ளார். இப்படி இளையராஜாவின் சாதனைகளை பதிவிட பல பதிவுகள் தேவை.
'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா'
" இசை ராஜாவுக்கு இனிய வாழ்த்துக்கள்"
'இன்னும் தேவை உங்கள் இசை இது எங்கள் ஆசை'
0 comments:
Post a Comment