
எனக்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் சனத் ஜெயசூரிய. தனது அதிரடியால் பல சாதனைகளைப் படைத்த சாதனை நாயகனுக்கு இன்று 40 ஆவது பிறந்த நாள்.வாழ்த்துக்கள் சனத்...
சாதனை நாயகனுக்காக இந்தப் பதிவு..............
சனத்தின் பெயரைக் கேட்டாலே எனக்குள் ஒரு உற்சாகம். ஆனால் எதிரணி வீரர்களுக்கு இவர் பெயரைக் கேட்டால் கதி கலங்கும்.
இலங்கையின் தென் பகுதியில் உள்ள மாத்தறை பகுதியில் 30.06.1969 இல் பிறந்தவர் சனத். இவரது முழுப் பெயர் சனத் டேரன் ஜெயசூரிய. 1989ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த சனத் 20 வருடங்களில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஆரம்பத்தில் பின் வரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சனத் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி தனது அதிரடியால் கிரிக்கெட் உலகைக் கலக்கியவர். ஒரு வீரராக மட்டுமன்றி தலைவராகவும் சில காலம் அணியை வழிநடத்திய பெருமையும் இவருக்குண்டு.
சனத்தின் உலக சாதனைகள் சில.............
*அதிக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியமை (432 போட்டிகள்)*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தமை (270 )
*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில்13000 ஓட்டங்களையும் 300 விக்கெட்களையும் கடந்த வீரர் (13151 ஓட்டங்கள், 313 விக்கெட்டுகள்)
*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதி விரைவாக அரைச் சதம் அடித்தமை (17 பந்துகளில்)
*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக வயதான வீரராக இருந்த சமயத்தில் சதம் அடித்தமை.( 39 வருடங்கள் 212 நாட்கள்)
*தலைவராக இருந்த நேரம் ஒரு நாள் சர்வதேச போட்டி ஒன்றில் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றமை (189 ஓட்டங்கள்)
*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக தடவைகள் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை ( 33 தடவைகள்)
இன்னும் இவரது சாதனைகள் பல....சனத்தின் சாதனைகளுக்கு ஒரு பதிவு போதாது. 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது கனவு. அந்தக் கனவு நனவாகவேண்டும் என்பதே என் விருப்பமும். உங்கள் விமர்சனங்களையும் குறிப்பிடுங்கள்.
சாதனை நாயகன் சனத்துக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.....அறுபதிலும் அதிரடி தொடரட்டும்.............
1 comments:
arumy சாதனை நாயகன் சனத்துக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.....அறுபதிலும் அதிரடி தொடரட்டும்.............
http://dshan2009.blogspot.com
Post a Comment