Pages

Monday, June 22, 2009

மகுடம் சூடியது பாகிஸ்தான்

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதலாவது 20-20' உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவிடம் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற ஏமாற்றத்துக்கு ஆறுதல் தேடிக்கொண்டது பாகிஸ்தான் அணி.

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.17 ஓவர்களிலேயே இலங்கை அணி 100ஓட்டங்களைக் கடந்தது. முதல்வரிசை வீரர்கள் ஏமாற்றம் அளித்ததை உணர்ந்த தலைவர் சங்கக்கரா பொறுமையாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார். சங்கக்கரா 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல்பெற்றார். நாம் எதிர்பார்த்த சனத், தில்ஷான் ஆகியோர் சோபிக்கத் தவறினர்.

139 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்139 ஓட்டங்களை 18.4 ஆவது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 139ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதில் நான் முதல் பதிவில் எதிர்வு கூறிய அஃப்ரிடி அதிரடியாக அசத்தினார்.இவர் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றார்.

அஃப்ரிடி ஆட்டநாயகன் விருதினையும் இத் தொடரில் 219 பந்துகளில் 317 ஓட்டங்களைப் பெற்ற தில்ஷான் தொடர் நாயகன் விருதினையும் பெற்றனர்.இவர், மொத்தமாக 7 போட்டிகளில் 46 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.

கடந்த 2007இல் நடந்த முதலாவது '20-20' உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணியிடம் கிண்ணத்தை பறிகொடுத்த பாகிஸ்தான், இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.

கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட பல விடயங்கள் இறுதிப் போட்டியில் நடந்தது ஆனால் இலங்கை அணி வெற்றி அடையும் என குறிப்பிட்டேன் அது மட்டுமே நிகழவில்லை.....

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates