கங்குலியின் 2ஆம் இன்னிங்ஸ்

இந்தியாவின் சிறந்த அணித் தலைவரான சௌரவ் கங்குலி கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார். ஐ.சி.சி.20- 20 உலகக் கோப்பை போட்டிகளின் போது அரையிறுதி ஆட்டம் முதல் கங்குலியின் வர்ணனையை நாம் ஈ.எஸ்.பி.என்.-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேட்கலாம்.
இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள கங்குலி, "இது நாள் வரை மற்ற வர்ணனையாளர்கள் என்னைப்பற்றி பேசி வந்தனர், தற்போது எனது முன்னாள் சக வீரர்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பை எதிர் நோக்கி எனது முன்னாள் சக வீரர்களுடன் கைகுலுக்கும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.
ஒரு வீரராக,தலைவராக இருந்து சாதித்த கங்குலி கிரிக்கெட் வர்ணனையாளராக சாதிப்பாரா? காலம் பதில் சொல்லும்....
0 comments:
Post a Comment