
நிலாவை விரும்பாதவர்கள் எவரும் இந்த உலகில் இல்லை. அதேபோல் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடலை விரும்பாதவர்கள் எவருமே இந்த உலகில் இல்லை. மொழி, இனம், மதம், பேதம் எல்லாவற்றையும் கடந்து பாலுவின் பாடல்கள் அனைவராலும் விமொழிகளிலும்ரும்பி ரசிக்கப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் பாடல் பாடிய பெருமை எஸ்.பி.பிக்கு உண்டு.
ஏழு ஸ்வரங்களில் எவ்வளவு பாடல்களை வேண்டுமானலும் உருவாக்க முடியும். ஆனால் ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் எஸ்.பி.பியின் குரல் இனிமைக்கு ஈடாக ஒரு குரல் இருக்குமா என்று ரசிகர்கள் வியக்கும் வண்ணம், திக்கெட்டும் எஸ்.பி.பியின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எஸ்.பி.பி தமிழில் முதலில் பாடிய பாடல் "இயற்கையென்னும் இளைய கன்னி" என்ற டூயட். இது 'சாந்தி நிலையம்' படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் இடம்பெற்ற பாடல். ஆனால் எஸ்.பி.பியை , தமிழ்த் திரையிசையில் உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாடல் ஆயிரம் நிலவே வா என்று அடிமை பெண்ணில் ஒலித்த பாடல்தான். இந்தப் பாடலை எஸ்.பி.பி பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்தப் பாடல் அவருக்குப் புகழை ஈட்டிக் கொடுத்தது.
எஸ்.பி.பி ஒரே பார்வையில்
01) முழுப்பெயர்: ஸ்ரீபதி பண்டித ரதயுல பாலசுப்பிரமணியம்
02) பிறந்த திகதி: 1946 ஜூன் 4
03) பாடிய மொழிகள்: தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், பெங்காளி,இந்தி, ஒரியா மற்றும் துளு
04) சாதனைகள்: 40 ஆண்டுகளில் 36,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலக சாதனை, 12 மணி நேரத்தில் 17 பாடல்களை பாடியமை
26 வினாடிகளில் மூச்சுவிடாமல் பாடலின் சரணத்தை பாடியமை
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 55 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்
6 முறை தேசிய விருது பெற்றமை
05) தேசிய விருது: 1. 1979 - சங்கராபரணம்
2. 1981 - ஏக் துஜே கே லிய
3. 1983 - சாகர சங்கமம
4. 1989 - ருத்ர வீண
5. 1995 - கானசாகர கானயோகி பஞ்சாக்ஷ்ராகவாய
6. 1996 - மின்சாரக் கனவு
இவை மட்டுமா.......இன்னும் பல........... இசைத் துறையில் தன் கொடியைப் பறக்கவிட்ட எஸ்.பி.பி. திரையில் நடிகராகி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 68 படங்கள் நடித்துள்ளார். தன்னுடைய முன்னோடியாக கருதும் -திரு. கண்டசாலாவிற்கு, 1990 ஆண்டு, ஹைதராபாத்தில் சிலை ஒன்றை திறந்து வைத்தார்.நவீன கருவிகளை நிறுவி எஸ்.பி.பி. ரிக்கார்டிங் தியேட்டர்கட்டி, அதற்கு தன் சினிமாவுலக குருவான கோதண்டபாணியின் பெயரைச் சூட்டினார்.
63 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் எஸ்.பி.பிக்கு இனிய வாழ்த்துக்கள்....
0 comments:
Post a Comment