
இரண்டாவது '20-20' உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்து பாகிஸ்தான் களம் காண்கிறது. புகழ்வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் இப் போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது.கடந்த முறை தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் 5ஓட்டங்களால் தோல்வியுற்று, கிண்ணத்தைக் கைப்பற்ற முடியாமல் ஏமாற்றம் அடைந்த பாகிஸ்தான் அணி, இம்முறை வலுவான இலங்கையுடன் அதற்கான பலப்பரீட்சையில் குதிக்கிறது.
குமார சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணி கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய அனைத்து அம்சங்களுடன் திகழ்ந்தாலும் பாகிஸ்தான் அணி சில அதிர்ச்சிகளையும் கொடுக்கலாம். இத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு சில நேரம் பாகிஸ்தான் பதிலடியும் கொடுக்கலாம். (கிரிக்கெட்டில் இது சகஜம்)இலங்கை:துடுப்பாட்டம்,பந்துவீச்சு,களத்தடுப்பு என அனைத்திலும் குறைசொல்ல முடியாத அணியாக இத் தொடரில் தோல்வியே காணாமல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அதே வேகத்தில் இறுதிப் போட்டியிலும் வாகைசூட ஆயத்தமாகியுள்ளது. அணியின் வெற்றி நாயகனாக ஜொலிக்கிறார் தில்ஷான். தொடரில் இதுவரை 3 அரை சதம் உட்பட 317 ஓட்டங்களைக் குவித்து அசத்தியுள்ள இவரது அபார ஆட்டம் தொடர்ந்தால், இலங்கை அணி அதிக ஓட்டங்களைப் பெறலாம். இவருடன் இணைந்து அதிரடி வீரர் ஜெயசூர்யா வாணவேடிக்கை நிகழ்த்தினால், இலங்கையின் வெற்றி உறுதி. இதேவேளை இலங்கை அணியின் பந்து வீச்சும் மிரட்டலாகவே உள்ளது. மலிங்கா,முரளிதரன், மெண்டிஸ் கூட்டணி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்ய முனைப்புக் காட்டுவர்.
பாகிஸ்தான்:மோசமானஆரம்பத் துடுப்பாட்டம்,வலுவற்ற களத்தடுப்பு ஆகியவற்றை மேம்படுத்தினால் உலகக் கிண்ணக் கனவை அவர்கள் ஒருவேளை நனவாக்கலாம். துடுப்பாட்டத்தில் பலவீனமாக இருந்தாலும் சுழலில் அப்ரிடி,அஜ்மல்,மாலிக் நம்பிக்கை அளிக்க வேகப்புயலாக அசத்துகிறார் உமர்குல். எதிரணியைத் தடுமாறச் செய்யும் இவரது பந்து வீச்சு இன்றும் தொடரும் என எதிர் பார்க்கலாம். சகல துறை வீரராக அசத்தி வரும்அப்ரிடி இன்றும் கலக்குவார் என நான் எதிர்பார்க்கிறேன்.
20-20' அரங்கில் இலங்கை,பாகிஸ்தான் அணிகள் நான்கு முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றி, இரண்டு தோல்வியை பதிவு செய்துள்ளன. தவிர "டுவென்டி-20' உலக கோப்பை வரலாற்றில் இரண்டு முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
இன்றைய போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளும் தீவிரமாக விளையாடும். முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இது என் கருத்து.....
சனத், அப்ரிடி இருவரும் அதிரடியாக ஆடினால் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும்.அதிரடி,வேகம்,சுழல் மூன்றும் அசத்தும் ஒரு சிறந்த போட்டியாக இறுதிப் போட்டி அமையுமா?
இறுதிப் போட்டியில் இலங்கைக்கே அதிக வெற்றி வாய்ப்பு.
இரண்டு அணிகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
1 comments:
ok mayuran , just wait & see...................
word verification :venaame " eduththu vidunga....
Post a Comment