
கடந்த மூன்று ஆண்டுகளாக பிரெஞ்ச்பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டி வரை முன்னேறி ஸ்பெயின் வீரர் நடாலிடம் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை தவறவிட்ட பெடரர் இம்முறை நடால் வெளியேறிவிட்ட நிலையில் முதன் முறையாக பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் ஸ்வீடன் வீரர் ராபின் சோடர்லிங்கை 6-1, 7-6, 6-4 என தோற்கடித்தார் பெடரர்.(பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி ஆரம்பிக்கும்போது ரோஜர் பெடரருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என பதிவில் குறிப்பிடிருந்தேன் அது நிஜமானதில் எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி) கிராண்ட்ஸ்லாம் போட்டிங்கள் அனைத்திலும் பட்டம் வென்றுள்ள ஃபெடரருக்கு, பிரெஞ்ச்பகிரங்க பட்டம் மட்டும் எட்டாக் கனியாகவே இருந்தது. தற்போது அதுவும் நிறைவேறியுள்ளது. அவருக்கு இது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன்மூலம் அமெரிக்க வீரர் பீட் சாம்ப்ராஸின் 14 கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனையை சமன் செய்துள்ளார்.
சாதனை வீரனுக்கு வாழ்த்துக்கள்....சாதனைகள் தொடரட்டும்......
0 comments:
Post a Comment