
இங்கிலாந்து கால்பந்தாட்ட கழகமான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு விளையாடும் போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தங்கள் அணிக்கு கொடுத்து விடுமாறு கோரி ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகமான ரியால் மேட்ரிட் மிகப் பெரும் பணத் தொகையை கொடுக்கவுள்ளது.
கால்பந்தாட்ட உலகில் மிகப்பெரிய வீரராக கருதப்படும், மான்செஸ்டர் யுனைடெட் சாதனை வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவை 80 மில்லியன் பவுண்டுகள் தொகை கொடுத்து வாங்க ரியால் மேட்ரிட் முடிவு செய்துள்ளது.ரொனால்டோ கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரொனால்டோவை தற்போது 80 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு விற்கப் போவது மான்செஸ்டர் அணி தான். இதனால் அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும்.
0 comments:
Post a Comment