
புற்றரையில் விளையாடப்படும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் உள்ள விம்பிள்டனில் இன்று ஆரம்பமாகிறது.நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரஃபேல் நடால், மூட்டு வலி காரணமாக திடீரென போட்டியிலிருந்து விலகியதால் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
2003 முதல் 2007 வரை தொடர்ந்து விம்பிள்டனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஃபெடரருக்கு, 12 மாதங்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் பரமவைரி நடால் சோதனை அளித்தார். விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் நடந்த இறுதிப் போட்டியில் 5 செட்களில் ஃபெடரரைத் தோற்கடித்து தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடால். இம்முறை நடால் திடீரென விலகிக் கொண்டுள்ளதால் ஃபெடரருக்கு எதிர்பார்த்த போட்டி இல்லாமல் போயுள்ளது. இதனால் 6ஆவது முறையாக பட்டம் வெல்வது மட்டுமல்லாமல்,15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றிய சாதனையாளராகவும் மாறும் வாய்ப்பை பெற்றுள்ளார் ஃபெடரர்.
5மாதங்களுக்கு முன்பு நடந்த அவுஸ்ரேலிய பகிரங்கப் போட்டியில் நடாலிடம் தோல்வியுற்றதால் ஃபெடரரின் ஆதிக்கம் முடிந்துவிட்டது என்ற கருத்து பரவலாக எழுந்தது. என்றாலும், நடாலுக்கு சாதகமான களிமண் தரையிலேயே தோற்கடித்து பிரெஞ்ச் பகிரங்கப் பட்டத்தை 2 வாரங்களுக்கு முன்பு முதன்முதலாகக் கைப்பற்றி எழுச்சியடைந்தார் ஃபெடரர். அத்துடன் சாம்ப்ராஸின் 14 கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனையை சமன் செய்தார்.
பிரிட்டன் வீரர் ஆன்டி முரே, ஆன்டி ராடிக் மற்றும் நோவக் ஜோகோவிக் ஆகியோர் ஃபெடரருக்கு இம்முறை சவாலாகத் திகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனை நாயகனே சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment