Pages

Saturday, May 30, 2009

தென்னாபிரிக்காவில் நடந்த ஐ.பி.எல் 20-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நிறைவடைந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் தற்போது 20-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மீது திரும்பியுள்ளது. ஐ.சி.சி.20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 5 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 12 நாடுகள் 4 பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன.
ஏ- பிரிவு- இந்தியா, பங்களாதேஷ்,அயர்லாந்து
பி- பிரிவு- இங்கிலாந்து, பாகிஸ்தான்,நெதர்லாந்து
சி- பிரிவு- இலங்கை, அவுஸ்ரேலியா, மேற்கிந்தியத்‌தீவுகள்
டி- பிரிவு- தென்னாபிரிக்கா, நியூசிலாந்து,ஸ்கொட்லாந்து
"லீக்"போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் "சூப்பர் 8" சுற்றுக்குத் தகுதி பெறும்.
"சூப்பர் 8" சுற்றில் தகுதி பெறும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெறும்.
20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆபிரிக்காவில் நடந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்தப் போட்டிகள் 216 நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று கூறுகிறது ஐ.சி.சி.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்... கொண்டாடுங்கோ....

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates