
முன்னணி ஐரோப்பிய கால்பந்தாட்ட கழக அணிகள் பங்கேற்கும் யு.ஈ.எப்.ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது. இதில் 2008ம் ஆண்டு சாம்பியன் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதின.
பார்சிலோனா அணி மூன்றாவது முறையாக சாதித்தது. பரபரப்பான இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.கிறிஸ்டியனோ ரொனால்டோ, ரூனிபோன்ற முன்னணி வீரர்கள் இருந்தபோதும் மான்செஸ்டர் அணி ஏமாற்றத்தையே சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி இத்தொடரில் மூன்றாவது முறையாக (1992,2006,2009) சாம்பியன் ஆனது.
0 comments:
Post a Comment