

பிரேசில் கால்பந்தாட்ட அணி என்றதும் நினைவுக்கு வரும் வீரர்கள் ரொனால்டோ, ரொனால்டினோ.ஆனால் இப்போது இவர்கள் அணிக்குள் இல்லை.
உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மற்றும் கான்ஃபெடரேஷன் கிண்ணப் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்களான ரொனால்டோ, ரொனால்டினோ ஆகியோர் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை.
ஜூன் 6ஆம் திகதி உருகுவே அணியையும் ஜூன் 10ஆம் திகதி பராகுவே அணியையும் சந்திக்கப்போகிறது பிரேசில்.
ரொனால்டோ,ரொனால்டினோ இருவரும் அண்மைக்காலமாக சிறப்பாக விளையாடவில்லை என்பதால் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லையாம்.பிரேசில் அணியின் பல வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்தவர்கள் இவர்கள்.
இனி எப்போது இவர்கள் களத்தில்...........
0 comments:
Post a Comment