Pages

Sunday, August 16, 2009

அன்வரின் சாதனை தகர்ந்தது

கிரிக்கெட் உலகில் இன்று புதிய சாதனை.கிரிக்கெட் வீரர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.சிம்பாப்வே பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியிலே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே அணியின் சார்ள்ஸ் கவன்ட்ரி என்ற வீரரே அந்த சாதனை நாயகன். இந்திய அணிக்கெதிராக 1997ஆம் ஆண்டு சயீட் அன்வர் படைத்த சாதனையே 12 ஆண்டுகளுக்கு பின் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இவர் 156 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 194 ஓட்டங்களைப் பெற்றார்.

சிம்பாப்வே வீரரொருவர் ஒரு இன்னிங்சில் பெற்றுக்கொண்ட கூடுதல் ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முதல் கிரேக் பிரைன் விஷார்ட் 2003 ஆம் ஆண்டு நமிபியா அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.


இவர் கஷ்டப்பட்டு சதமடித்தும் சிம்பாப்வே அணியால் பங்களாதேஷ் அணியை வெல்ல முடியவில்லை. இதேநேரம் பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் தானும் ஒரு சாதனை வீரன் என்பதை இன்று கிரிக்கெட் உலகுக்கு தனது அதிரடி மூலம் எடுத்துக்காட்டியுள்ளார். இவர் 154 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் வீரர் ஒருவர் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், ஒரு இன்னிங்சில் பெற்ற கூடுதலான ஓட்டங்கள்.


சிம்பாப்வே சென்றுள்ள பங்களாதேஷ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று 4வது போட்டி நடந்தது.
சிம்பாப்வே அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 312ஓட்டங்கள் .
பங்களாதேஷ் அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்களை எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதன் மூலம் பங்களாதேஷ் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. தவிர, அந்நிய மண்ணில் தொடர்ந்து 2வது முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதித்தது. முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான தொடரை வென்றது பங்களாதேஷ்.

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தும் பங்களாதேஷ் வீரர்கள்.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates