Pages

Monday, August 10, 2009

தொடரை வென்றது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில்,பாகிஸ்தான் அணி132 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆறுதலை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிது.


இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டி கொழும்பில் நேற்று நடந்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்களை எடுத்தது. இம்ரான் நசீர் 35,முகமது யூசுப் 43,யூனிஸ் கான் 76,மிஸ்பா 73*
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளையிழந்து தடுமாறியது.
மகேல 31,கண்டம்பி 42*,மலிங்க பண்டாரா 31. இவர்களைத் தவிர ஏனைய வீரர்களனைவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 34.2 ஒவரில் சகல விக்கெட்டுகளையுமிழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், நவீத்-உல்-ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


ஆட்டநாயகனாக பாகிஸ்தானின் நவீதும், தொடர் நாயகனாக இலங்கையின் திலன் துஷாராவும் தெரிவாகினர். முதல் முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் தொடர்களை பாகிஸ்தான் அணிக்கெதிராக இலங்கை வெற்றி கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates