Pages

Sunday, August 16, 2009

ட்ராவிட் உள்ளே...ஷேவாக் வெளியே....

இலங்கையில் நடைபெறவுள்ள மும்முனை கிரிக்கெட் போட்டி,மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் ராகுல் ட்ராவிட்.காயம் காரணமாக முன்னணி வீரர் ஷேவாக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்புகிறார் ட்ராவிட்.கடைசியாக 2007ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் ட்ராவிட் விளையாடியிருந்தார்.இந்திய துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தும் நோக்கில் ட்ராவிட்டுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடரிலிருந்து தாமாகவே விலகிக் கொண்ட சச்சின், 6 மாதங்களுக்குப் பின் மீண்டும் களமிறங்க உள்ளார். காம்பிருடன் இணைந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அசத்த காத்திருக்கிறார் சச்சின். காயத்திலிருந்து மீண்டுள்ள சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு வருகிறார்.

இந்திய அணியில் 8 துடுப்பாட்டவீரர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள்,2 சுழற்பந்து வீச்சாளர்கள்,1சகலதுறை வீரர் உட்பட 15 வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.

மொத்தத்தில் இந்திய அணி பலமான அணியே. ட்ராவிட் வருகையால் இந்திய எழுச்சி பெறுமா..........

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates