Pages

Wednesday, August 5, 2009

மர்லின் மன்றோ

கடந்த இரண்டு நாட்களாக விளையாட்டுலகில் பெரிதாக ஒன்றுமில்லை.நொறுக்குத் தீனி போல பதிவுகள் தந்து பழக்கப்பட்ட எனக்கு பதிவொன்று தர மனம் துடித்தது. இன்று ஓய்வு நாள்(எனக்கு வேலை) உங்களுக்கு. எண்ணங்கள் சிறகடித்தன. என்ன பதிவை கொடுக்கலாம் சரி வாசித்தே பாருங்கள் புரியும்.


உலகிலேயே கவர்ச்சியின் மூலம் சினிமா உலகில் புகழின் உச்சியைத் தொட்டவர் மர்லின் மன்றோ.
1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ.
உலக இளைஞர்களின் கவர்ச்சிக் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம்,இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது.


மர்லினின் அபிரிதமான அழகும்,பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும்,36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை,ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது.


மர்லினின் இளமைப் பருவம் கொடியது.பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்புப் பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள்.பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள்,வெவ்வேறு வளர்ப்புப் பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட,அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்
அனாதை விடுதியில்தான் வளர்ந்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.


ஆரம்பத்தில் தனது 16ஆவது வயதில் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுக்கும் மாடல் அழகியாகத்தான் பணி புரிந்தார். இவரது படங்கள் சில பத்திரிகைகளில் பிரசுரமாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தப் புகைப்படங்கள்தான் அவருக்கு சினிமா வாய்ப்புக்களை ஏற்படுத்தின.ஆரம்பத்தில் 125 டாலரை சம்பளமாகப் பெற்ற மர்லின் மன்றோ பின்னர் 3500 டாலர்கள் வரை சம்பளத்தைப் பெற்றார்.


உலக ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த இவர் பல படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.


தனது 16 ஆவது வயதில் 1942ஆம் ஆண்டு திருமணம் புரிந்து கொண்டார்.
முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை.வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 4ஆண்டுகளின் பின்னர் விவாகரத்து செய்து கொண்டார். அதன் பின் இரண்டாவது திருமணம்.
இரண்டாவது திருமணமும் மன நிறைவானதாக அமையவில்லை.

இந்த காலகட்டத்தில் மதுவும் நோயும் மர்லினை வாட்டி எடுத்தன. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியுடனான அறிமுகம் மர்லினுக்கு கிடைத்தது. ஜனாதிபதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவர் பாடியது,அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மர்லின் ஒரு உளவாளி.ஜான் கென்னடி மூலம் அமெரிக்காவின் ரகசியங்கள் தெரிந்துகொள்கிறார் என்று பலராலும் கூறப்பட்டது.


இறுதியில் 1962 ஆகஸ்ட் 5 தனது அறையில் இறந்து காணப்பட்டார். அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளே மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இவரது உடலைப் பெற்றுக்கொள்ள கணவனோ,காதலனோ,உறவினர்களோ யாருமில்லை.இருந்த ஒரே உறவான மர்லினின் தாயோ மகளின் மரணத்தை உணர முடியாத மனச்சிதைவுடன் மனநல காப்பாகத்தில் இருந்தார்.


மர்லின் சிறந்த பாடகி."லேடீஸ் ஆ·ப் தி கோரஸ்" படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார். மொத்தமாக ௩௦ இற்கும் மேற்ப்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. இதைவிட 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


என்றென்றும் சர்வதேச திரைப்பட ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்த இந்தக் கவர்ச்சிப் புயல் மர்லின் மன்றோ, தனது 36ஆவது வயதில் மரணத்தை அணைத்துக்கொண்டார். இவரது மரணம் இன்னும் மர்மமே.........


இன்று இவரது 47 ஆவது நினைவு தினம்.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates