Pages

Wednesday, August 12, 2009



லக நாயகனுக்காக
இன்றைய நாள் சினியுலகில் பொன்னான நாள். இன்றுதான் கலைஞானி கமல்ஹாசன் கலையுலகில் காலடி எடுத்து வைத்த நாள். இன்று அவருக்கு பொன்விழா நாள்.

1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆறு வயதில் "களத்தூர் கண்ணம்மா" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். ஜெமினி கணேசன்-சாவித்ரி தம்பதிகளுக்கு மகனாக அந்தப் படத்தில் நடித்தார். நடித்த முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஜனாதிபதி விருது பெற்றார் கமல்.
களத்தூர் கண்ணம்மாவைத் தொடர்ந்து "பாதக் காணிக்கை","வானம்பாடி","ஆனந்த ஜோதி","பார்த்தல் பசிதீரும்" போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அற்புதமாக நடித்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

1967 இல் டி.கே.எஸ் நாடகக் குழுவில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.கதகளி,குச்சுப்பிடி நடனங்களைக் கற்று நடன நிகழ்ச்சிகளை நடத்தினார்.

"நான் ஏன் பிறந்தேன்","அவள் ஒரு தொடர்கதை" படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்த கமல், "உணர்ச்சிகள்" படத்தில் கதாநாயகனாக நடித்தார்.படம் பாதியில் நின்றுவிட்டது. அதன் பின் "அரங்கேற்றம்"படத்தில் நடித்துப் புகழின் உச்சிக்குச் சென்றார். அதன் பின் "சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் வில்லன் பாத்திரத்தில் அசத்தினார். இதே காலத்தில் மலையாளப் படங்களிலும் நடித்தார்.அங்கும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.கமல் கதாநாயகனாக நடித்து முதல் வெளிவந்த படம் "பட்டம் பூச்சி"." மேல் நாட்டு மருமகள்" படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இதே படத்தில் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமான மும்பை நடிகை வாணியை காதலித்து மணமுடித்தார் கமல்.25 படங்கள் நடித்த பின்னும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் "அபூர்வ ராகங்கள்" படத்தில் நடிக்க இயக்குனர் பாலச்சந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் நடித்த பின்னர் இவர் எங்கோ சென்று விட்டார்.


"மன்மத லீலை","மூன்று முடிச்சு" படங்களும் இவரது நடிப்பால் பேசப்பட்டன. இதைத் தொடர்ந்து கமல் நடித்த "16 வயதினிலே" படம் வெள்ளி விழா கொண்டாடியது. பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து தன நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் கமல்."மூன்றாம் பிறை" இவருக்கு மற்றுமொரு அத்தியாயம் என்றே சொல்லலாம்.

படங்களில் நடித்தது மட்டுமன்றி சில திரைப்படங்களை இயக்கியுமுள்ளார்.பாடகராக பல பாடல்களைப் பாடியுமுள்ளார். மொத்தத்தில் கமல் சகலகலா வல்லவன். இந்திய அரசின் தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்று சாதனைகள் படைத்துள்ளார் உலக நாயகன்.


உலக நாயகனுக்கு ஒரு பதிவு போதாது.பல பதிவுகள் தேவை. இன்னொருமுறை கமலின் பதிவில் சிறப்பான மேலும் பல விடயங்களை எதிர்பாருங்கள்.உலக நாயகனுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் கூறுங்கள்.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates