இன்று 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2010 ஆம் ஆண்டை வரவேற்கவுள்ள நிலையில் முன்னைய பதிவின் தொடர்ச்சி இது....
நவம்பர் 18. காலை 10 மணி முதல் ஒருமணி வரையான நிகழ்ச்சி நேயர்களின் பங்களிப்புடன் 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அறிமுகமான இசையமைப்பாளர்களில் யாரது இசையமைப்பு சிறப்பாக இருக்கிறது என்பதை வாக்கெடுப்பு மூலம் நடத்தினேன். அமோகமான நேயர்களின் வாக்குகள் அடிப்படையில் ஹரிஷ் ஜெயராஜ் தெரிவானார் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்க உதவிய டயானாவுக்கும் நன்றிகள்.
பிற்பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை எமது அறிவிப்பாளர்களை வானலையில் தேடிப்பர்ர்தேன். காரணம் அன்று அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமையால் ஓய்வாக இருந்தார்கள்.
அன்று அவர்களை சிறப்பு விருந்தினர்களாக சில நிமிடங்கள் பேச அழைத்தபொழுது அவர்கள் தந்த உற்சாகம் என்னை சோர்வின்றி நிகழ்ச்சிகளைப் படைக்க உறுதுணையாக இருந்தது. மாயா ,ஷங்கர் ,கஜமுகன் ,ரவூப்,குணா,கணா ,ஷெல்ரன்,டயானா,ஹோஷியா,கவிதா,ராஜ்,ஆரணி,பிரசாந்த்,மோகன்,மற்றும் தயாரிப்பாளர் பிரஜீவ் ,அலுவலக உதவியாளர்கள் ஆஷா ,கௌரி ஆகியோரின் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பானது.

மாலை மூன்று மணிக்கு எமது சந்தைப்படுத்தல்,விரிவாக்கல் பிரிவு நண்பர்களுடன் ஒரு விறு விறுப்பான கலக்கல் நிகழ்ச்சி சிறப்பாக நகர்ந்தது .மாலை 5 மணிமுதல் நேயர்களோடு உரையாடி பாடல்களை கொடுத்தேன்.
இரவு 9.30 மணிக்கு நிலாச்சோறு நிகழ்ச்சியில் சக்தி என்றால் உங்கள் எண்ணத்தில் தோன்றும் உணர்வுகளை கவிதைகளாகக் கூறுங்கள் எனக் கூறியதும் எமது நேயர்கள் பல சிறப்பான கவிதைகளைக் கூறி பரிசில்களையும் வென்றெடுத்தனர். அந்த நேரத்தில் எமது சக வானொலியான வெளிச்சம் fm இல் நிகழ்ச்சி படைக்க வந்த ரவூப் என்னை பார்க்க சக்தி fm கலையகம் வந்தார்.கலையகம் வந்த ரவூப் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சிரித்தபடி.என்னவென்று கேட்டபோது கவிதை என்றார். சக்திக்கா என்று கேட்க தலையசைத்தபடி புன்முறுவலுடன் எழுதிக்கொண்டே இருந்தார்.
ஆரம்ப காலங்களில் ரவூபின் கவிதை சொல்லும் தன்மையால் கவரப்பட்டவன் என்ற வகையில்,சக்திக்கு ரவூப் எழுதிய கவிதையை அவரது குரலில்ஆவலோடு எதிர்பார்த்தேன்.ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் அவரது கவிதை இப்படி அமைந்தது.....
11 ஆண்டுகளில் சாதனைகள் படைக்கின்ற சக்தியில் தானுமொரு சிறு சாதனைதான் என்பதை நிரூபிக்க ஈரம் காயாத இந்தக் குரலோடு 24 மணி நேர முழு அறிவிப்பாளராக கடமையில் கண்ணியம் காக்கின்ற கனிவான எங்கள் மயூரனுக்கு இந்த இதமான இரவுப் பொழுதில் என் இனிய இதயராக வாழ்த்துக்களை நிலாச்சோறாக வழங்கி வாழ்த்துகிறேன்.....
நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. காரணம் சக்தி பற்றிய கவிதை தான் என்று நான் நினைத்திருந்தேன்.இப்படி எழுதியதை முன்னரே தெரிந்திருந்தால் ஒலிவாங்கியைக் கொடுத்திருக்கமாட்டேன்.

மதியப் பொழுதில் ஒரு சிலர் என்னிடம் வந்து மயூரன், 18 மணித்தியாலங்களை 24 மணித்தியாலங்களாக தொடருங்கள் அது நல்லா இருக்கும் என்றனர். நானோ இல்லை என்று மறுத்து விட்டேன்.இருந்தாலும் நேயர்களின் அதிக விருப்புகளும் இதே மாதிரி அமைய, எனது முடிவைத் தளர்த்தி 24 மணித்தியாலங்கள் தொடர்ந்து நிகழ்ச்சி படைக்க உடன்பட்டேன்.
நேரம் 12 மணியைக் கடந்து நவம்பர் 19 ஆம் திகதி ஆனது.தொடர்ந்து நான் மட்டுமே கலையகத்தில் தனியே. என்னோடு நேயர்கள் துணையாக வீடுகளில் வானொலிப்பெட்டிக்கருகில். காலை 6 மணிவரை இலங்கையிலிருந்து மட்டுமன்றி சர்வதேச ரீதியில் பல நாடுகளிலிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் நேயர்கள் தந்த ஆதரவு சொல்லிலடங்காது.
காலை 6 மணிக்கு வழமையாக நிகழ்ச்சி படைக்க வரும்கணா,ஹோஷியாவிடம் நவம்பர்,19 கலையகத்தை ஒப்படைத்துவிட்டு எனது 24 மணி நேர தொடர் அறிவிப்புக்கு ஓய்வு கொடுத்தேன்.

இந்த 24 மணி நேர சாதனைப் பயணத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள். இந்த பயணம் முடிந்து 1 மாதம் கடந்த நிலையிலும் என்னைக் காணும் நேயர்கள் அந்த நினைவுகளை மீட்டிப்பார்க்க வைக்கிறார்கள்.
நான் அறிவிப்புத்துறைக்குள் நுழைந்து 11 வருடங்கள் கடந்த நிலையில், கடந்த நவம்பர் 18, 19 ஆம் திகதிகளில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக நிகழ்ச்சி செய்ததை என்னால் என்றுமே மறக்க முடியாது. இலங்கைத் தனியார் தமிழ் வானொலியொன்றில் தொடர்ந்து 24 மணிநேரம் ஒரு அறிவிப்பாளர் தொடர்ந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது இதுதான் முதல் சந்தர்ப்பமென பலர் கூறினார்.நான் அறிந்தவரையிலும் அது சரி.
விரிவாக விபரமாக இந்தப் பதிவைத் தரவேண்டுமென எண்ணினேன் ஆனால் நேரம் என்னுடன் வில்லத்தனம் புரிவதால் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.நன்றி.




டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி நபராக சாதனைகள் படைத்தது மட்டுமன்றி இணைப்பாட்டத்திலும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரன் மஹேல .
டெஸ்ட் போட்டிகள் மட்டுமன்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை இலங்கையணிக்கு மஹேல வழங்கியுள்ளார்.
159 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 42 சதங்கள்,53 அரைச் சதங்கள் அடங்கலாக 12773 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 436 போட்டிகளில் 45 சதங்கள்,91அரைச் சதங்கள் அடங்கலாக 17178 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

வில்ஸ் சர்வதேச கிண்ணம் என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு இந்தப் போட்டிகள் அறிமுகமாகின.அதன் பின் ஐ.சி.சி நாக் அவுட் போட்டியாக மாறியது.தற்போது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட்(மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்) போட்டியாக நடைபெறுகிறது. 6 ஆவது சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 5 வரை நடைபெறவுள்ளது. இம்முறை 8 அணிகளே களத்தில்.
முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்த ஆர்ஜென்ரின வீரர் டெல் போட்ரோ.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 46.4ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.இதனால் இந்திய அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இதன் மூலம் இலங்கை மண்ணில் நடந்த இரு அணிகளுக்கு மேல் பங்குபற்றிய தொடர்களில், 11 வருடங்களின் பின் இந்தியா இறுதிப்போடியில் வென்று சாதித்தது.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற சச்சின்,ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 59 முறை ஆட்டநாயகன் விருதினையும் 14 முறை தொடர் நாயகன் விருதினையும் பெற்றுள்ளார்.
இன்று இன்னுமொரு சாதனைக்கு உரித்தானார் சனத்.ஒரு மைதானத்தில் கூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையே அது.ஆர்.பிரேமதாச மைதானத்தில் சனத் இதுவரை 70 ௦போட்டிகளில் 2478 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இதற்கு முதல் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம்.இவர் ஷார்ஜா மைதானத்தில் 59 போட்டிகளில் 2464 ஓட்டங்களைப்

முறைப்படி கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானி இசையும் பயின்றுள்ள சின்மயி 'சப்தஸ்வரங்கள்' நிகழ்ச்சியின் மூலம் தனது இசைத் திறமையை வெளிக்காட்ட இவருக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பினை கொடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நெஞ்சில் தில் தில்...என்ற பாடலே இவரின் முதல் பாடல்.
கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நெஞ்சில் தில் தில்...என்ற பாடல் மூலம் 2002 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.இதை விட இன்னும் பல விருதுகளையும் பெற்றுள்ளார் சின்மயி.
ஹர்பஜன் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2007 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய வீரர் சைமன்ட்ஸை குரங்கு என திட்டி அதன் பின் விசாரணைகளை எதிர்கொண்டமையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.2008ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின்போது தனது சக வீரரான ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் அறைந்து,பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.இதற்குத் தண்டனையும் அனுபவித்தார்.



பிரேமதாச மைதானம் 

இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா பெரிதாக சாதிக்க வாய்ப்புக்கள் குறைவு.இரண்டாம் சுற்று வரை முன்னேறலாம். 
நாகர்கோவில் சுடலைமுத்து என்ற இயற்பெயர் கொண்ட கிருஷ்ணன் (என்.எஸ்.கே) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசேரி என்ற இடத்தில். சுடலையாண்டி பிள்ளை, இசக்கியம்மாள் தம்பதிகளுக்கு மகனாக1908 நவ.29 இல் பிறந்தார்.

சுழல் நாயகன் முரளி இன்றுதான் சர்வதேச ரீதியில் கிரிக்கெட்டில் அறிமுகமான நாள்.அவுஸ்ரேலிய அணிக்கெதிராக கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முரளி தனது சுழலின் தன்மையை கிரிக்கெட் உலகிற்கு உணர்த்தினார்.அறிமுகப்போடியில் முதல் இனிங்சில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.அந்த விக்கெட் அவுஸ்ரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான கிரேக் மக்டெர்மெட்.
முரளியின் கிரிக்கெட் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள் ஏராளம்.கிரிக்கெட் வீரர்களால்,நடுவர்களால் என பல்வேறு சந்தர்ப்பங்களில் முரளி மீது,அவரது பந்து வீச்சு மீது ஏராளமான சர்ச்சைகள்.முரளியின் அசுர வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய மேலை நாட்டுக் கிரிக்கெட் வீரர்கள் தான் முரளி பந்தை வீசுவதில்லை எறிகிறார் என்று குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.இருந்தும் அவற்றையெல்லாம் கண்டு அஞ்சாது தனது மாயாஜால சுழலினால் இவற்றுக்கு பாடம் கற்பித்தார்.



