Pages

Thursday, December 31, 2009

24 தொடர்ச்சி..........


இன்று 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2010 ஆம் ஆண்டை வரவேற்கவுள்ள நிலையில் முன்னைய பதிவின் தொடர்ச்சி இது....

நவம்பர் 18. காலை 10 மணி முதல் ஒருமணி வரையான நிகழ்ச்சி நேயர்களின் பங்களிப்புடன் 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அறிமுகமான இசையமைப்பாளர்களில் யாரது இசையமைப்பு சிறப்பாக இருக்கிறது என்பதை வாக்கெடுப்பு மூலம் நடத்தினேன். அமோகமான நேயர்களின் வாக்குகள் அடிப்படையில் ஹரிஷ் ஜெயராஜ் தெரிவானார் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்க உதவிய டயானாவுக்கும் நன்றிகள்.

பிற்பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை எமது அறிவிப்பாளர்களை வானலையில் தேடிப்பர்ர்தேன். காரணம் அன்று அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமையால் ஓய்வாக இருந்தார்கள்.
அன்று அவர்களை சிறப்பு விருந்தினர்களாக சில நிமிடங்கள் பேச அழைத்தபொழுது அவர்கள் தந்த உற்சாகம் என்னை சோர்வின்றி நிகழ்ச்சிகளைப் படைக்க உறுதுணையாக இருந்தது. மாயா ,ஷங்கர் ,கஜமுகன் ,ரவூப்,குணா,கணா ,ஷெல்ரன்,டயானா,ஹோஷியா,கவிதா,ராஜ்,ஆரணி,பிரசாந்த்,மோகன்,மற்றும் தயாரிப்பாளர் பிரஜீவ் ,அலுவலக உதவியாளர்கள் ஆஷா ,கௌரி ஆகியோரின் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பானது.


மாலை மூன்று மணிக்கு எமது சந்தைப்படுத்தல்,விரிவாக்கல் பிரிவு நண்பர்களுடன் ஒரு விறு விறுப்பான கலக்கல் நிகழ்ச்சி சிறப்பாக நகர்ந்தது .மாலை 5 மணிமுதல் நேயர்களோடு உரையாடி பாடல்களை கொடுத்தேன்.

இரவு 9.30 மணிக்கு நிலாச்சோறு நிகழ்ச்சியில் சக்தி என்றால் உங்கள் எண்ணத்தில் தோன்றும் உணர்வுகளை கவிதைகளாகக் கூறுங்கள் எனக் கூறியதும் எமது நேயர்கள் பல சிறப்பான கவிதைகளைக் கூறி பரிசில்களையும் வென்றெடுத்தனர். அந்த நேரத்தில் எமது சக வானொலியான வெளிச்சம் fm இல் நிகழ்ச்சி படைக்க வந்த ரவூப் என்னை பார்க்க சக்தி fm கலையகம் வந்தார்.கலையகம் வந்த ரவூப் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சிரித்தபடி.என்னவென்று கேட்டபோது கவிதை என்றார். சக்திக்கா என்று கேட்க தலையசைத்தபடி புன்முறுவலுடன் எழுதிக்கொண்டே இருந்தார்.

ஆரம்ப காலங்களில் ரவூபின் கவிதை சொல்லும் தன்மையால் கவரப்பட்டவன் என்ற வகையில்,சக்திக்கு ரவூப் எழுதிய கவிதையை அவரது குரலில்ஆவலோடு எதிர்பார்த்தேன்.ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் அவரது கவிதை இப்படி அமைந்தது.....

11 ஆண்டுகளில் சாதனைகள் படைக்கின்ற சக்தியில் தானுமொரு சிறு சாதனைதான் என்பதை நிரூபிக்க ஈரம் காயாத இந்தக் குரலோடு 24 மணி நேர முழு அறிவிப்பாளராக கடமையில் கண்ணியம் காக்கின்ற கனிவான எங்கள் மயூரனுக்கு இந்த இதமான இரவுப் பொழுதில் என் இனிய இதயராக வாழ்த்துக்களை நிலாச்சோறாக வழங்கி வாழ்த்துகிறேன்.....
நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. காரணம் சக்தி பற்றிய கவிதை தான் என்று நான் நினைத்திருந்தேன்.இப்படி எழுதியதை முன்னரே தெரிந்திருந்தால் ஒலிவாங்கியைக் கொடுத்திருக்கமாட்டேன்.




மதியப் பொழுதில் ஒரு சிலர் என்னிடம் வந்து மயூரன், 18 மணித்தியாலங்களை 24 மணித்தியாலங்களாக தொடருங்கள் அது நல்லா இருக்கும் என்றனர். நானோ இல்லை என்று மறுத்து விட்டேன்.இருந்தாலும் நேயர்களின் அதிக விருப்புகளும் இதே மாதிரி அமைய, எனது முடிவைத் தளர்த்தி 24 மணித்தியாலங்கள் தொடர்ந்து நிகழ்ச்சி படைக்க உடன்பட்டேன்.

நேரம் 12 மணியைக் கடந்து நவம்பர் 19 ஆம் திகதி ஆனது.தொடர்ந்து நான் மட்டுமே கலையகத்தில் தனியே. என்னோடு நேயர்கள் துணையாக வீடுகளில் வானொலிப்பெட்டிக்கருகில். காலை 6 மணிவரை இலங்கையிலிருந்து மட்டுமன்றி சர்வதேச ரீதியில் பல நாடுகளிலிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் நேயர்கள் தந்த ஆதரவு சொல்லிலடங்காது.

காலை 6 மணிக்கு வழமையாக நிகழ்ச்சி படைக்க வரும்கணா,ஹோஷியாவிடம் நவம்பர்,19 கலையகத்தை ஒப்படைத்துவிட்டு எனது 24 மணி நேர தொடர் அறிவிப்புக்கு ஓய்வு கொடுத்தேன்.



இந்த 24 மணி நேர சாதனைப் பயணத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள். இந்த பயணம் முடிந்து 1 மாதம் கடந்த நிலையிலும் என்னைக் காணும் நேயர்கள் அந்த நினைவுகளை மீட்டிப்பார்க்க வைக்கிறார்கள்.

நான் அறிவிப்புத்துறைக்குள் நுழைந்து 11 வருடங்கள் கடந்த நிலையில், கடந்த நவம்பர் 18, 19 ஆம் திகதிகளில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக நிகழ்ச்சி செய்ததை என்னால் என்றுமே மறக்க முடியாது. இலங்கைத் தனியார் தமிழ் வானொலியொன்றில் தொடர்ந்து 24 மணிநேரம் ஒரு அறிவிப்பாளர் தொடர்ந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது இதுதான் முதல் சந்தர்ப்பமென பலர் கூறினார்.நான் அறிந்தவரையிலும் அது சரி.

இதற்கு சந்தர்ப்பத்தை வழங்கிய எமது முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். இத்தனைக்கும் மேலாக உறுதுனையாகவிருந்த நேயர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

விரிவாக விபரமாக இந்தப் பதிவைத் தரவேண்டுமென எண்ணினேன் ஆனால் நேரம் என்னுடன் வில்லத்தனம் புரிவதால் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.நன்றி.

2 comments:

RJ Dyena said...

good article...with ur experience...

ki-UP

அன்பு நண்பன் said...

valthukal anna, unkal pajanam thodaradum...

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates