இந்தியா, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. முதலாவது போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியுடன் முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ளதால் இந்தப் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இப்போது.
இந்தியா
சச்சின், டோனி,லக்ஷ்மன்,சேவாக்,ட்ராவிட் ஆகியோரின் துடுப்பாட்டம் மட்டுமே இந்தியாவின் பலம்.வேகப் பந்து வீச்சு பலவீனமே. அனுபவ வீரர்களான சாகிர்கான் , ஸ்ரீசாந்த் ஆகியோர் அணியில் இல்லாமை இந்தியாவுக்கு பாதகமே.பந்து வீச்சில் சுழல் பந்துவீச்சை மட்டுமே அதிகம் நம்பியுள்ளது இந்தியா.
இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அணிக்கெதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில், இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளித்தனர். சச்சின்,டோனி,லக்ஷ்மன்,சேவாக்,ட்ராவிட் போன்ற முன்னணி வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர். யுவராஜ் மட்டுமே சதமடித்தார்.
சாகிர்கான், ஸ்ரீசாந்த் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்களின்றி இந்திய அணி வேகப்பந்து வீச்சில் சாதிக்க முடியாத நிலையில் ஓஜா,மிஸ்ரா,ஹர்பஜன் சுழலையே நம்பியுள்ளது இந்திய அணி.
இலங்கை
இலங்கை அணியின் துடுப்பாட்டம், பந்து வீச்சு இரண்டுமே பலமாகவுள்ளது. மஹேல,சங்ககார,டில்ஷான் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க, மாலிங்கவின் வேகமும் முரளியின் சுழலும் இலங்கைகுக் கை கொடுக்குமென்றே தோன்றுகிறது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம், பந்து வீச்சு இரண்டுமே பலமாகவுள்ளது. மஹேல,சங்ககார,டில்ஷான் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க, மாலிங்கவின் வேகமும் முரளியின் சுழலும் இலங்கைகுக் கை கொடுக்குமென்றே தோன்றுகிறது.
இலங்கை இந்திய அணிகள் 32 போட்டிகளில் ஒன்றையொன்று சந்தித்துள்ளன. இதில் 13 இல் இந்தியாவும் 05 இல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. 14 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
சாதனை முரளி
முதலாவது போட்டியுடன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளி ஓய்வுபெறவுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை முரளியை நோக்கி.
முதலாவது போட்டியுடன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளி ஓய்வுபெறவுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை முரளியை நோக்கி.
1 comments:
முரளி நிற்சயம் 800 விக்கட்டுக்கள் எடுக்கவேண்டும் என்பதே எல்லோருடையதும் அவா. பொறுத்திருந்து பார்ப்போம்
Post a Comment