Pages

Tuesday, March 22, 2011

கனவு மெய்ப்படுமா?

கனவு மெய்ப்படுமா?

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாய் நடந்து வரும் நிலையில் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவில் A குழுவிலிருந்து இலங்கை,நியூசிலாந்து,அவுஸ்ரேலியா,பாகிஸ்தான் ஆகிய அணிகள் இலகுவாக காலிறுதிக்குள் முன்னேறின.B குழுவிலிருந்து தென்னாபிரிக்கா,இந்தியா,இங்கிலாந்து,மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முன்னேறின.

கென்யா,நெதர்லாந்து அணிகள் இம்முறை ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறின. சிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் 2 வெற்றிகளை பெற்றுக் கொண்டன.
பங்களாதேஷ் 3 வெற்றிகளை பெற்றுக் கொண்டது.கனடா 1 போட்டியில் வெற்றி பெற்றது.


காலிறுதியில் மோதும் அணிகள்
பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா எதிர் அவுஸ்ரேலியா
நியூசிலாந்து எதிர் தென்னாபிரிக்கா
இலங்கை எதிர் இங்கிலாந்து
இம்முறை இந்தியா,பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த பிரிவில் இடம்பெற்றதால்,இரு அணிகளுக்குமிடையிலான மோதல் இல்லாமல் போனது.காலிறுதியிலும் இரு அணிகளும் மோதும் நிலையும் ஏற்படவில்லை.சில சமயம் அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் சந்திக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இம்முறை மூன்று ஆசிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியிருப்பது ஆசிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.
எட்டு அணிகளும் அட்டகாசமாய் அசத்தக் காத்திருக்கின்றன.விறுவிறுப்பான போட்டிகள் இனி கிரிக்கெட் ரசிகர்களைப் பரவசப்படுத்தப் போகிறது.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates