Pages

Sunday, March 27, 2011

ஆசியாவிற்குள் உலகக் கிண்ணம் உலகக் கிண்ணக் காலிறுதிப் போட்டிகளின் நிறைவில் முதன் முறையாக மூன்று ஆசிய அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன.இம்முறை அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று முதன் முறையாக இரு ஆசிய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.






4ஆவது காலிறுதியில் இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதின.ஆரம்பம் முதலே தடுமாறிய இங்கிலாந்து, ஜொனதன் ரொட்டின் (86) ஓட்டங்களுடன் 50 ஓவர்களில் 6 விக்கெட்டிழப்புக்கு 229 ஓட்டங்களைப் பெற்றது.230 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையைப் படைத்தது இலங்கை.

இலங்கையணி,நான்காவது முறையாக (1996,2003,2007,2011) அரையிறுதிக்கு முன்னேறியது.கடந்த 1996 இல் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை,2003 இல் அரையிறுதி வரை முன்னேறியது.2007 இல் இறுதி வரை முன்னேறிய இலங்கை, 1975,1979, 1983, 1987, 1992, 1999 ஆகிய தொடர்களில் முதற் சுற்றோடு வெளியேறியது.
3ஆவது காலிறுதியில் நியூசிலாந்து தென்னாபிரிக்க அணிகள் மோதின.நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டிழப்புக்கு 221 ஓட்டங்களைப் பெற்றது. ஜெசி ரைடர் 83 ஓட்டங்கள். 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா நியூசிலாந்தின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 43.2 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையுமிழந்து, 49 ஓட்டங்களால் தோல்வியடைந்து உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது.

கலிஸ் கூடுதலாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேக்கம் ஓரம் ஆட்ட நாயகன் விருதை வென்றார். நியூசிலாந்து,ஆறாவது முறையாக உலகக் கிண்ண (1975,1979, 1992, 1999, 2007, 2011) அரையிறுதிக்கு முன்னேறியது.

உலகக் கிண்ண 2ஆவது காலிறுதியில் நடப்பு சாம்பியனான அவுஸ்ரேலிய இந்திய அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டிழப்புக்கு 260 ஓட்டங்களைப் பெற்றது.பொறுப்புடன் ஆடிய பொன்ரிங் 104 ஓட்டங்களைப் பெற்று ஒரு நாள் போட்டிகளில் தனது 30 ஆவது சதத்தையும் உலகக் கிண்ணப் போட்டிகளில் 5ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.இதன்மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார்.


261 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா ஓவர்களில் ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.பெரும் ஏமாற்றத்துடன் காலிறுதியுடன் வெளியேறியது அவுஸ்ரேலியா.

Wednesday, March 23, 2011

பணிந்தது பாகிஸ்தானிடம் மேற்கிந்தியத் தீவுகள்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் முதல் காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 112 ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்திய பாகிஸ்தான்,விக்கெட் இழப்பின்றி 113 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணியானது.

மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் ஆடுகளம் விட்டகன்றனர்.சந்தர்போல் மட்டும் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அப்ரிடி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

113 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் கம்ரன் அக்மல்,மொகமட் ஹஃபீஸ் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியுடன் விக்கெட் இழப்பின்றி 20.5 ஓவர்களில் 113 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
மொகமட் ஹஃபீஸ் 61 ஓட்டங்களையும் கம்ரன் அக்மல் 47 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமலிருந்தனர். ஹஃபீஸ் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் ஏழாவது முறையாக (1979,1983,1987, 1992,1996,1999,2011) காலிறுதிக்கு முன்னேறியது.

1979,1983,1987 ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான்,1992 இல் முதன்முதலில் உலகக் கிண்ணத்தை வென்றது.1999 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியது.இம்முறை பாகிஸ்தான் இறுதிவரை முன்னேறுமா?
மேற்கிந்தியத் தீவுகள் காலிறுதியுடன் வெளியேறியது.சமியின் அனுபவற்ற அணி தலைமைப் பொறுப்பும் தோல்விக்கு முக்கிய காரணம்.எதிர்காலத்தில் அணியில் பல மாற்றங்கள் நிகழும் என்பது இப்போது உறுதி.

Tuesday, March 22, 2011

கனவு மெய்ப்படுமா?

கனவு மெய்ப்படுமா?

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாய் நடந்து வரும் நிலையில் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவில் A குழுவிலிருந்து இலங்கை,நியூசிலாந்து,அவுஸ்ரேலியா,பாகிஸ்தான் ஆகிய அணிகள் இலகுவாக காலிறுதிக்குள் முன்னேறின.B குழுவிலிருந்து தென்னாபிரிக்கா,இந்தியா,இங்கிலாந்து,மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முன்னேறின.

கென்யா,நெதர்லாந்து அணிகள் இம்முறை ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறின. சிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் 2 வெற்றிகளை பெற்றுக் கொண்டன.
பங்களாதேஷ் 3 வெற்றிகளை பெற்றுக் கொண்டது.கனடா 1 போட்டியில் வெற்றி பெற்றது.


காலிறுதியில் மோதும் அணிகள்
பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா எதிர் அவுஸ்ரேலியா
நியூசிலாந்து எதிர் தென்னாபிரிக்கா
இலங்கை எதிர் இங்கிலாந்து
இம்முறை இந்தியா,பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த பிரிவில் இடம்பெற்றதால்,இரு அணிகளுக்குமிடையிலான மோதல் இல்லாமல் போனது.காலிறுதியிலும் இரு அணிகளும் மோதும் நிலையும் ஏற்படவில்லை.சில சமயம் அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் சந்திக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இம்முறை மூன்று ஆசிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியிருப்பது ஆசிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.
எட்டு அணிகளும் அட்டகாசமாய் அசத்தக் காத்திருக்கின்றன.விறுவிறுப்பான போட்டிகள் இனி கிரிக்கெட் ரசிகர்களைப் பரவசப்படுத்தப் போகிறது.

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates