Pages

Monday, June 14, 2010

தம்புள்ள நோக்கி.....

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நாளை முதல் இலங்கையின் தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளன.இம்முறை இலங்கை, இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் பலம் கான களம் காண்கின்றன. அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ளன.

இலங்கை
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவரான அரவிந்த டி சில்வா தலைமையிலான குழு, தேர்வு செய்துள்ள அணியில் அண்மைக் காலமாக பிரகாசிக்கத் தவறி வந்த சனத் அணியிலில்லை.அஜந்த மென்டிசுக்குப் பதிலாக நீண்ட நாட்களின் பின் ரங்கன ஹேரத் அணியில் அங்கம் வகிக்கிறார்.மஹேல, சங்ககார, முரளி, மலிங்க ஆகியோர் அணிக்கு மீண்டும் வருவதால் இலங்கை அணியின் பலம் அதிகமே. இதே அணி சிறப்பாக வழி நடத்தப்பட்டால் 2011ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் அதிகம் சாதிக்கும்.

இந்தியா
அண்மைக் காலமாக 2௦-20உலகக் கிண்ணக் கிரிக்கெட்,சிம்பாப்வே தொடர் ஆகியவற்றில் சாதிக்கத் தவறியதால் பல விதமான அழுத்தத்துடன் இத் தொடரை எதிர் கொள்கிறது இந்தியா.அண்மைக் காலமாக சாதிக்கத் தவறும் யுவராஜ் அணியில் இல்லை. யூசுப் பத்தான் அதிரடியாய் நீக்கம்.சச்சின் தனிப்பட்டகாரணங்களால் ஓய்வு.ஐ .பி. எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடி அசத்திய சௌரப் திவாரி இத் தொடரில் அறிமுகமாகலாம்.டோனியின் மாநிலத்திலிருந்து டோனியின் சாயலில் வருகிறார்.எதிர் காலத்தில் பெண் கிரிக்கெட் ரசிகர்களின் நாயகன் இவர்தான்.

பாகிஸ்தான்
அப்ரிடியின் தலைமையில் பல இளம் வீரர்களுடன் களம் காணவுள்ளது பாகிஸ்தான். நீண்ட இடைவெளிக்குப் பின் "குழப்படி நாயகன்- ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" அக்தார் அணிக்கு வருவது பாக் அணிக்கு பலமே. பாக். கிரிக்கெட் சபையால் தடை செய்யப்பட்டு பின் அதிரடியாய் தடை நீக்கப்பட்ட சொகைப் மலிக் அணிக்குள் வருவதும் பலமே.இவர்கள் இருவரையும் அதிகம் நம்பியுள்ளார் அப்ரிடி நம்பிக்கை வீணாகுமா?


பங்களாதேஷ்
அதிக அனுபவமில்லாத அணியென்று சொல்லப்பட்டாலும் அதிரடியாய் விளையாடும் அணி பங்களாதேஷ். இந்த அணியில் துடுப்பாட்டத்தில் அதிகம் சாதிக்கத் தவறும் அஷ்ரபுல் இன்னும் அணிக்குள் இருப்பது மாயமே.இத் தொடரே இவரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை நிர்ணயிக்கும். அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலின் அதிரடி தொடர்ந்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கையும் அதிகரிக்கும்.அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் சகல துறை வீரராக சாதிப்பாரா?


அதிகம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் அமைவதால் ஒரு அணி 300 ஓட்டங்களைப் பெறுமா என்பது சந்தேகமே.தம்புள்ள மைதானத்தில் இலங்கை அணி,பாக் அணிக்கெதிராக கூடுதலான 289 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஆசிய நாடுகள் நான்கும் தம்மிடையே மோதி வல்லவன் யார் என்பதை தாமே தீர்மானிக்கப் போகின்றன இம்மாதம் 24ஆம் திகதி.



Thursday, June 10, 2010

உதைக்குப் பின் முத்தம்


கால்பந்தாட்ட ரசிகர்களின் கனவுத் திருவிழா இம்மாதம் ( ஜூன்) 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கிறது.விளையாட்டுலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்தாட்டத்தின் சிகரமாய் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் அமைகின்றன.

1930௦ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை 18 உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.19ஆவதுஉலகக் கிண்ண போட்டிகள் தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. 32 அணிகள் அடுத்த மாதம் வரை மோதி தம் பலத்தை நிரூபிக்கவுள்ளன.மொத்தம் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளை நடாத்தும் சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பான பீபா(fifa)1904 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னரே சர்வதேச அளவில் கால்பந்தாட்டம் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டது.அதனடிப்படையில் பிரான்சில் நடந்த ஒலிம்பிக்கில் கால்பந்தாட்டம் இணைத்துக்கொள்ளப்பட்டது. இறுதிப் போட்டியில் உருகுவே, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. அதில் உருகுவே வெற்றி பெற்று முதல் ஒலிம்பிக் கால்பந்தாட்ட சாம்பியனானது

அதன் பின்னர் சர்வதேச அளவில்உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்த சர்வதேச கால்பந்தாட்டக் கூட்டமைப்பு தீர்மானித்தது. முதன் முதலில்1930 ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.அதில் உருகுவே வெற்றிபெற்று சம்பியனானது.
4ஆண்டுகளுக்கொருமுறை போட்டிகள் நடைபெறும் வகையில் அட்டவணைப்படுத்தப்பட்டன.இருந்தாலும் உலகப்போர் காரணமாக 1942,1946 ஆம் ஆண்டுகளில் போட்டிகள் நடைபெறவில்லை.அதன் பின்1950 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எந்தவித தடங்கலுமின்றிபோட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடைபெற்றுள்ள உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள் ஒரே பார்வையில்
ஆண்டு போ. ந.பெ. நாடு வெ.பெ. அணி ப. ப நா. எ
1930 உருகுவே உருகுவே 13
1934 இத்தாலி இத்தாலி 16
1938 பிரான்ஸ் இத்தாலி 15
1950 பிரேசில் உருகுவே 13
1954 சுவிட்சர்லாந்து மேற்குஜேர்மனி 16
1958 சுவீடன் பிரேசில் 16
1962 சிலி பிரேசில் 16
1966 இங்கிலாந்து இங்கிலாந்து 16
1970 மெக்ஸிகோ பிரேசில் 16
1974 ஜெர்மனி மேற்குஜேர்மனி 16
1978 ஆர்ஜென்ரினா ஆர்ஜென்ரினா 16
1982 ஸ்பெயின் இத்தாலி 24
1986 மெக்ஸிகோ ஆர்ஜென்ரினா 24
1990 இத்தாலி மேற்குஜேர்மனி 24
1994 அமெரிக்கா பிரேசில் 24
1998 பிரான்ஸ் பிரான்ஸ் 32
2002 கொரியா/ஜப்பான் பிரேசில் 32
2006 ஜெர்மனி இத்தாலி 32
2010 தென்னாபிரிக்கா ????????? 32

குறிப்பு:போ. .பெ. நாடு - போட்டிகள் நடைபெற்ற நாடு, வெ.பெ. அணி - வெற்றி பெற்ற அணி, ப. ப நா. எ - பங்குபற்றிய நாடுகளின் எண்ணிக்கை


இதுவரை அதிக உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட தொடரில்(19) பங்குபற்றிய பெருமை பிரேசில் அணிக்கே உள்ளது. இத்தாலி17ஆவது தடவையாகவும் ஆர்ஜென்ரினா15ஆவது தடவையாகவும் மெக்ஸிகோ 14ஆவது தடவையாகவும் ஸ்பெயின் 13ஆவது தடவையாகவும் களம் காண்கின்றன.

பிரேசில் 5 முறையும் இத்தாலி 4 முறையும் ஜெர்மனி 3 முறையும் உருகுவே மற்றும் ஆர்ஜென்ரினா என்பன 2 முறையும் பிரான்ஸ், இங்கிலாந்து என்பன 1 முறையும் உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளன.

இம்முறை பல நாடுகளின் முக்கிய வீரர்கள் உபாதைக்குள்ளாகி போட்டிகளில் பங்கேற்க முடியாமையால் அந்த அணிகள் சாதிக்குமா என்பது கேள்விக்குறியே.

பிரேசில்,இத்தாலி, இங்கிலாந்து, ஜேர்மனி, ஆர்ஜென்ரினா மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் முன்னேறிச் செல்லுமென எதிர்பார்க்கலாம்.

உலகக் கிண்ணத்தை முத்தமிடப் பல அணிகள் முயன்றாலும் உலகக் கிண்ணம் யார்வசம் சென்று முத்தம் பெற ஆசைப்படுகிறதோ .........

Sunday, June 6, 2010

எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா ............


ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் பாரிசில் நடைபெறுகின்றன. இம்முறையும் பல அதிர்ச்சிகள்.

மகளிர் பிரிவு
மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியாவின் சமந்தா ஸ்டோசர், இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனை எதிர்கொண்டார். விறு விறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஷியோவோன், 6-4, 7-6 என்ற செட் கணக்கில் சமந்தா ஸ்டோசசரை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்ச் பகிரங்க, ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக இறுதி வரை முன்னேறிய இத்தாலியின் ஷியோவோன் கைப்பற்றும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமிது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல வீராங்கனைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



மகளிர் இரட்டையர் பிரிவு
அமெரிக்காவின் செரீனா - வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் இரட்டையர் பிரிவில் 6- 2, 6- 3 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற மகளிர் இரட்டையர்என்ற சாதனையைபடைத்தனர் வில்லியம்ஸ் சகோதரிகள்.

ஆடவர் இரட்டையர் பிரிவு
ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில்,டானியல் நெஸ்டர் (கனடா)-நெனட் ஸிமோன்ஜிக் (சேர்ர்பியா) இணை 7-5,6-2, என்ற செட் கணக்கில்வெற்றி பெற, இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லூகாஸ் லூயி ஜோடி, தோல்வியைத் தழுவியது.

ஆடவர் பிரிவு
ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால், சுவீடனின் ராபின் சோடர்லிங் ஆகியோர் தற்போது மோதுகின்றனர்முதல் செட்டை 6-4 என தன்வசப்படுத்திய நடால் 02ஆம் செட்டிலும் 5-2 என்ற அடிப்படையில் முன்னிலையிளுள்ளதால் இந்தப் போட்டியில் பெரும்பாலும் வெற்றி பெறுவார்.

இந்தப் போட்டியில் ரபெல் நடால், சோடர்லிங்கை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றால், பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் 05 ஆவது தடவையாக வெற்றி பெற்ற வீரரென்ற சாதனையைத்
தன் வசப்படுத்படுத்தலாம்
ஆடவர் பிரிவிலும் எதிர்பார்க்கப்பட்ட பலரும் சறுக்கலை சந்தித்தனர்
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates