Pages

Tuesday, September 22, 2009


சூடு பறக்கும் தென்னாபிரிக்கா...


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட்(மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்) போட்டிகள் 2 ஆண்டுகளுக்கொருமுறை நடைபெற்று வருகிறது.
வில்ஸ் சர்வதேச கிண்ணம் என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு இந்தப் போட்டிகள் அறிமுகமாகின.அதன் பின் ஐ.சி.சி நாக் அவுட் போட்டியாக மாறியது.தற்போது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட்(மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்) போட்டியாக நடைபெறுகிறது. 6 ஆவது சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 5 வரை நடைபெறவுள்ளது. இம்முறை 8 அணிகளே களத்தில்.

போட்டியில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவாகப் பிரிகப்பட்டுளன. A பிரிவில் இந்தியா,பாகிஸ்தான் அவுஸ்ரேலியா,மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும் B பிரிவில் இலங்கை,இங்கிலாந்து,தென்னாபிரிக்கா,நியூசிலாந்து அணிகளும் உள்ளன


ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்குமணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.


மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தவிர ஏனைய 7 அணிகளும் சமபலத்துடனே களம் காண்கின்றன.

11 வருடங்களின் பின்:

கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த முதல் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா கிண்ணத்தை வென்று அசத்தியது.அதற்குப் பின் இத்தொடரில் சாதிக்கவில்லை.தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.சொந்த மண்ணில், தென்னாபிரிக்கா சாதிக்கவில்லை என்பது கவலைதான்.


சொந்த மண்ணில் 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண(50 ஓவர்), 2007 இல் நடந்த '20-20' உலகக்கிண்ணத் தொடர்கள் தென்னாபிரிக்காவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தன. இம் முறை சொந்த மண், தென்னாபிரிக்காவுக்கு கைகொடுக்குமா...

தென்னாபிரிக்க ஆடுகளங்களில் ஏற்கனவே விளையாடிய வீரர்களை வைத்துப் பார்க்கும்போது டில்சான்(இலங்கை),யுவராஜ்சிங் (இந்தியா),அப்ரிடி(பாகிஸ்தான்),மைக்கேல் கிளார்க் (அவுஸ்ரேலியா), கிரகம் சிமித்(தென்னாபிரிக்கா) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ஸ்டூவர்ட் பிராட்(இங்கிலாந்து), மிச்சேல் ஜான்சன் (அவுஸ்ரேலியா),டேல் ஸ்டெய்ன் (தென்னாபிரிக்கா), முரளிதரன் (இலங்கை), வெட்டோரி (நியூசிலாந்து) லசித் மாலிங்க (இலங்கை), ஆகியோர் பந்து வீச்சிலும் சாதிக்கலாமென்பது எனது எதிர்பார்ப்பு.

இறுதிவரை விறுவிறுப்போடு நகரப்போகிறது மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்.....

நேரமில்லாததால் இந்தப் பதிவில் அதிக விடயங்களைத் தரமுடியவில்லை.அடுத்த பதிவில் விரிவாகத் தருகிறேன்.

Wednesday, September 16, 2009


எதிர்பார்த்தும் எதிர்பாராததும்


அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்குமுன்னரே, அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் அரங்கேறும் என நான் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.அதேபோல் நடந்தேறியிருக்கிறது.

எதிர்பார்த்த முன்னணி நட்சத்திரங்கள்,எதிர்பாராத,அதிகம் அனுபவமில்லாத நடட்சத்திரங்களிடம் வீழ்ந்தனர்.


ஆடவர் பிரிவு
ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரரை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து பட்டத்தை சுவீகரித்தார் ஆர்ஜென்ரின வீரர் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ.

டெல் போட்ரோ 3-6, 7-6 (5), 4-6, 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தினார்.
முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்த ஆர்ஜென்ரின வீரர் டெல் போட்ரோ.
1977 ஆம் ஆண்டின் பின்னர் ஆர்ஜென்ரினாவிலிருந்து அமெரிக்கப் பகிரங்கப் பட்டத்தை வெல்லும் முதல் வீரர் டெல் போட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது. 1977 இல் ஆர்ஜென்டினா வீரர் குல்லர்மோ விலாஸ் அமெரிக்கப் பகிரங்கப் பட்டத்தை வென்றிருந்தார்.

பெடரர் ஏமாற்றம்
இதற்கு முன்னர்தான் பங்கேற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில்,40 தடவைகள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த பெடரர், 41ஆவது போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இதற்கு முன்னர் பெடரர் - டெல் போட்ரோ மோதிய 6 போட்டிகளில் பெடரரே வெற்றி பெற்றிருந்தார்.

1920-25ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 6 முறை அமெரிக்கப் பகிரங்கப் பட்டத்தை பில் டில்டன் வென்றிருந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக பெடரர் அமெரிக்கப் பகிரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார்.இம் முறை பெடரர் வெற்றி பெற்றிருந்தால் டில்டனின் சாதனையை அவர் சமப்படுதியிருக்கலாம். என்ன செய்வது விளையாட்டிலும் இது சகஜம்தானே......

மகளிர் பிரிவு

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெல்ஜிய வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாகியை வீழ்த்திப் பட்டத்தை வென்றார்.

ஓய்வுக்குப் பின்னர் டென்னிஸ் போட்டிக்குத் திரும்பியுள்ள கிளைஸ்டர்ஸ் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமிது.
தனது குழந்தையுடன் கிளைஸ்டர்ஸ்

திருமணத்திற்குப் பின்னர் தாய்மையடைந்த கிளைஸ்டர்ஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதன் பின் அமெரிக்கப் பகிரங்கப் தொடரில் மீண்டும் களமிறங்கி பட்டத்தைக் கைப்பற்றி தனது மீள் வருகையை உறுதி செய்துள்ளார்.

Tuesday, September 15, 2009


11 வருடங்களின் பின்


இலங்கை,இந்திய,நியூஸிலாந்து அணிகள் பங்குபற்றிய மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை,இந்திய அணிகள் மோதின.


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி,தனது அணி முதலில் துடுப்பெடுத்தாட விரும்பினார்.சச்சினும் ட்ராவிட்டும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் நுழைந்து ஓட்டங்களைக் குவித்தனர்.இருவரும் முதல் விக்கெட்டுக்காக 95 ஓட்டங்களைப் பெற்றனர். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமிழந்து 319 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 46.4ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.இதனால் இந்திய அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இதன் மூலம் இலங்கை மண்ணில் நடந்த இரு அணிகளுக்கு மேல் பங்குபற்றிய தொடர்களில், 11 வருடங்களின் பின் இந்தியா இறுதிப்போடியில் வென்று சாதித்தது.


சச்சின்
சச்சின் டெண்டுல்கர் 91 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த சதம் ஒருநாள் சர்வதேச போட்டியில் இவர் அடிக்கும் 44ஆவது சதம்.அது மட்டுமன்றி இலங்கையணிக்கெதிராக 8 வது சதம்.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற சச்சின்,ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 59 முறை ஆட்டநாயகன் விருதினையும் 14 முறை தொடர் நாயகன் விருதினையும் பெற்றுள்ளார்.


ஆர்.பிரேமதாச மைதானத்தில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் சச்சினுக்கு சொந்தமானது. இந்த மைதானத்தில் சச்சின் 27 போட்டிகளில் 4 சதமடங்கலாக 1096 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இலங்கையில் 1998ஆம் ஆண்டு நடந்த மும்முனைப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதில் சச்சின் சதமடித்திருந்தார்.அதே பாணியில் 11வருடங்களின் பின் இப்போது மீண்டும் சதமடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

சச்சின்..... சாதனை நாயகன்....

Saturday, September 12, 2009

அதிரடிக்கு சனத்...

சனத் இல்லாத இலங்கையணியை நினைத்துப் பார்த்தல் கவலைதான்.சனத்தின் அதிரடிதான் இலங்கையணியின் முதுகெலும்பு.சனத் ஓட்டங்களைக் குவிக்காத போட்டிகளில் இலங்கையணியின் நிலை நீங்கள் அனைவரும் அறிந்ததே.நான் சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.


40 ௦வயதைக் கடந்தும் இன்று அதிரடியாக ஆடி 98ஓட்டங்களை வேகமாகப் பெற்றார்.இன்னும் 2 ஓட்டங்களைப் பெற்றிருந்தால்,தனது சாதனையை முறியடித்து மீண்டுமொரு சாதனை படைத்திருக்கலாம்.அது என்ன சாதனை....அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை மீண்டும் புதுப்பித்திருக்கலாம்.


இந்திய அணிக்கெதிராக தம்புள்ளையில் 28-௦01-2009 இல் நடைபெற்ற போட்டியில் சனத் (39 வருடங்களும் 212 நாட்களும்) சதமடித்தார். இதுதான் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதி கூடிய வயதில் வீரரொருவர் சதமடித்த சந்தர்ப்பம். இன்று சதமடித்திருந்தால் சனத்துக்கு வயது 40 ௦வருடங்கள்74 நாட்கள். இன்று இன்னுமொரு சாதனைக்கு உரித்தானார் சனத்.ஒரு மைதானத்தில் கூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையே அது.ஆர்.பிரேமதாச மைதானத்தில் சனத் இதுவரை 70 ௦போட்டிகளில் 2478 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இதற்கு முதல் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம்.இவர் ஷார்ஜா மைதானத்தில் 59 போட்டிகளில் 2464 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
சாதனை நாயகனை அண்மையில் சக்தி fm கலையகத்தில் சந்தித்தபோது....

இன்றைய போட்டியின் கதாநாயகனாக இறுதியில் தனது பெயரைப் பதித்துக் கொண்டவர் மத்யூஸ்.

மத்யூஸ் துல்லியமாகப் பந்து வீசி இந்திய அணியின் 6 விக்கெட்டுகளை 20 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து சாய்த்தார். இது அவரது சிறந்த பந்துவீச்சுப்பெறுதி மட்டுமன்றி ஆர்.பிரேமதாச மைதானத்தில் பெறப்பட சிறந்த பந்துவீச்சுப் பெறுதியுமாகும்.அத்துடன் இந்திய அணிக்கெதிராக இலங்கை வேகப்பந்துவீச்சாளரொருவர் பெற்ற சிறந்த பந்துவீச்சுப் பெறுதி.இது ஒருநாள் சர்வதேச போட்டியோன்றில் பெறப்பட்ட 19 ஆவது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியுமானது.தனது 12 ஆவது போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்மத்யூஸ்.

முரளி,கேல,ஹ்ரூப்,மாலிங்க,மென்டிஸ் போன்ற M வரிசை வீரர்களில் இப்போது த்யூஸ்.சிறந்த சகலதுறை வீரராகப் பிரகாசிக்கும் மத்யூஸ் இனி வரும் போட்டிகளிலும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் இலங்கை அணியில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம்.


மும்முனை சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் 3 ஆவது போட்டியில் 139 ஓட்டங்களால் தோல்வி கண்டது இந்தியா.இலங்கை மண்ணில் இந்தியா சந்தித்த மிகப் பெரும் தோல்வி இது.

இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு....

Thursday, September 10, 2009

இசை இளவரசிக்கு இன்று வயது 25


சினிமாவில் பாடவேண்டுமென்பது பலரது கனவு.அப்படிப்பட்ட கனவோடு வந்து பல இனிய பாடல்களைத் தந்து இசை ரசிகர்களை தன் வசீகரக் குரலால் கவர்ந்தவர் பாடகி சின்மயி.


இன்று பாடகி சின்மயின் 25 ஆவது பிறந்த நாள்.அதற்காக இந்தப் பதிவு
முறைப்படி கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானி இசையும் பயின்றுள்ள சின்மயி 'சப்தஸ்வரங்கள்' நிகழ்ச்சியின் மூலம் தனது இசைத் திறமையை வெளிக்காட்ட இவருக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பினை கொடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நெஞ்சில் தில் தில்...என்ற பாடலே இவரின் முதல் பாடல்.

முதல் பாடலே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்க,இன்று வரை தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களின் டைட்டில் பாடல்களையும் பாடியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நெஞ்சில் தில் தில்...என்ற பாடல் மூலம் 2002 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.இதை விட இன்னும் பல விருதுகளையும் பெற்றுள்ளார் சின்மயி.

பாடகியாக மட்டுமன்றி தொலைக்காட்சி,வானொலி அறிவிப்பாளராகவும் தனது குரலால் பலரையும் கவர்ந்தவர் என்றால் மிகையில்லை.

லதா மங்கேஷ்கர்,சித்ரா,ஜானகி ஆகியோரின் பாடல்கள் அதிகம் பிடிக்கும் எனக் கூறும் சின்மயி,நல்ல பாடகியாக தனது இசைப் பயணம் தொடரவேண்டுமென்பதே இலட்சியம் எனக் கூறுகிறார்.

வாழ்த்துக்கள் சின்மயி...உங்கள் இசைப் பயணம் தொடரட்டும்...

Wednesday, September 9, 2009

ர்பஜனின் தூஸ்ரா விமான நிலையத்திலுமா ??????


சாதாரணமானோர் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கினால் அந்த விடயங்கள் வெளிலயுலகுக்கு வரவே வராது.ஆனால் பிரபலங்கள் ஏதாவது சர்ச்சைகளில் மாட்டினால் உலகெல்லாம் பரவிவிடும்.அதுவும் கிரிக்கெட் வீரர்கள் சர்ச்சைகளில் சிக்கினால் அதோ கதிதான். இப்போது புதிய சர்ச்சை ஒன்றில் வசமாய் மாட்டுப்பட்டிருகிறார் ஹர்பஜன் சிங்.
ஹர்பஜன் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2007 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய வீரர் சைமன்ட்ஸை குரங்கு என திட்டி அதன் பின் விசாரணைகளை எதிர்கொண்டமையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.2008ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின்போது தனது சக வீரரான ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் அறைந்து,பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.இதற்குத் தண்டனையும் அனுபவித்தார்.


இப்போது இன்னுமொரு சர்ச்சை......இலங்கையில் நடைபெறும் மும்முனைத் தொடரில் பங்குபற்ற வருவதற்காக பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஹர்பஜன், தனது காரிலிருந்து உடைமைகளை எடுப்பதற்குள் ஒரு புகைப்படப்பிடிப்பாளரின் கேமரா அவரது தலையில் தவறுதலாக(சாதுவாக எமது பார்வையில்-காட்சியைப் பார்த்தபோது) இடித்து விட்டது. இதனால் கோபமடைந்த ஹர்பஜன் புகைப்படப்பிடிப்பாளரை நோக்கி விட்டார் குத்து.

ஹர்பஜனின் தூஸ்ரா புகைப்படப்பிடிப்பாளரை நோக்கி பலமாக....

ஹர்பஜனின் இந்தக் குத்து தூஸ்ராவைவிட மோசமாகவே தென்பட்டது அந்த கட்சியைப் பார்த்தபோது. இதை பார்த்த ஏனைய படப்பிடிப்பாளர்களும் புகைப்படப்பிடிப்பாளர்களும் சும்மா இருப்பார்களா?தாம் எதிர்பாராத இந்த அரிய காட்சியைத் தமது கேமராவுக்குள் பத்திரமாகப் பதித்துக்கொண்டனர். இப்போது கிரிக்கெட் உலகில் இதுதான் பரபரப்பு........ கொஞ்ச நாட்களுக்கு ஹர்பஜன் பேச்சுதான் கிரிக்கெட்டில்.


ஹர்பஜன்....அதிகம் கோபப்படாதீர்....கோபத்தால் சாதிக்க முடியாது உமக்கு.....

சர்ச்சை நாயகனுக்கு இப்போது வந்திருப்பது அணித் தலைவர் ஆசை. இப்போதைக்கு நிறைவேறாது இந்தப் பேராசை.......

Monday, September 7, 2009

மும்முனை ஆரம்பம்
இலங்கை,இந்திய,நியூஸிலாந்து அணிகள் மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை ஆரம்பமாகிறது.ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் தலா ஒருமுறை மோதும்.இதில் வெற்றியைப் பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள்(சனத்,டில்ஷான்)அதிரடியாக ஓட்டங்களைப் பெற்றால் இலங்கையணி கூடுதல் ஓட்டங்களைப் பெறலாம்.பந்துவீச்சில் சிறப்பாக மிளிரும் அதேவேளை,துடுப்பாட்டத்தில் நடுவரிசை வீரர்கள் விரைவாக ஆட்டமிழப்பதே இலங்கையணியின் பலவீனம்.சனத்,மஹேல,சங்ககார,டில்ஷான் இவர்கள் சாதிக்காவிட்டால் இலங்கையணியின் நிலை மோசம்தான்.

நியூஸிலாந்து

அண்மையில் நடைபெற்ற இரண்டு 20௦-20௦ போட்டிகளிலும் இலங்கையணியைத் தோற்கடித்த இளம் வீரர்களைக் கொண்ட நியூஸிலாந்து பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்குகிறது.அதே வேகத்தில் ஒருநாள் போட்டியிலும் தனது வெற்றியைத் தொடரலாம் நியூஸிலாந்து.டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலடைந்த தோல்விக்குப் பரிகாரம் தேடும் முனைப்போடு நியூஸிலாந்து வீறு கொண்டு எழலாம்.
இந்தியா
தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது. இலங்கை,இங்கிலாந்து,நியூசிலாந்து,மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடர்களை வென்று எழுச்சி பெற்றுள்ளது.டிராவிட் 2 வருடங்களுக்குப் பின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.சச்சின் அணிக்கு மீண்டும் வருவது இன்னும் அணிக்குப் பலத்தைக் கொடுக்கும்.துடுப்பாட்டம் பந்துவீச்சு,களத்தடுப்பு மூன்றிலும் சிறப்பாக விளங்கும் இந்திய அணி சாதிக்க அதிக வாய்ப்புள்ளது.


கடைசியாக இந்திய அணி1998இல் நடந்த மும்முனை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.அதன் பின் இலங்கையில் நடந்த பல நாடுகள் மோதிய 5 ஒரு நாள் தொடர்களில் இந்தியா பங்கேற்றது.இதில் ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் வெற்றி பெறவில்லை. இம்முறை வெற்றி பெற்றால் 11 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் பெற்ற வரலாற்று வெற்றியாக மாறலாம்.

சனத் சாதனை
சனத் இந்தத் தொடரில் உலக சாதனை ஒன்றைப் படைக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.ஒரு மைதானத்தில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையே அது.பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான 'இன்சமாம்' தான் தற்போதுவரை இந்த சாதனைக்கு சொந்தக்காரன்.இவர் ஷார்ஜா மைதானத்தில் 2464 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இந்த சாதனயை முறியடிக்க சனத்துக்கு இன்னும் 91 ஓட்டங்கள் தேவை.

சனத் கடைசியாக விளையாடிய 19 போட்டிகளில் 514 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளார்.சனத்தின் அதிரடி மீண்டும் தேவை.
பிரேமதாச மைதானம்
பிரேமதாச மைதானத்தில் இதுவரை 90 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்திய அணியே இலங்கை அணிக்கெதிராக கூடுதல் ஓட்டங்களைப் பெற்றுள்ளது.2009 ஆம் ஆண்டு 5 விக்கெட் இழப்புக்கு 363 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.சனத்,மஹேல,சங்ககார ஆகியோர் இந்த மைதானத்தில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.பந்துவீச்சில் முரளி 69 விக்கெட்டுகளையும் சனத் 57 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முன்னணியிலுள்ளனர்.

முடிசூடப்போவது இலங்கையா,இந்தியாவா, நியூஸிலாந்தா....
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates