முத்து எங்கள் சொத்து
இன்று காலையில் தென்னாபிரிக்காவின் வேகப் பந்து வீச்சாளர் மக்காய நிடினியின் பிறந்த நாளுக்காக சந்தோஷத்துடன் அவரைப் பற்றி பதிவிட்ட நான், இப்போது கவலையோடு இந்த பதிவைத் தொடர்கிறேன்.
இன்று மாலை நண்பர் கனாதிபனிடமிருந்து தொலைபேசி அழைப்பு.... அண்ணா முரளி டெஸ்ட் கிரிகெட்டிலிருந்து ஓய்வாம் உண்மையா.... என்றார். எனக்கு இது புதிராகவே இருந்தது. நம்பவில்லை. அப்பிடியா.... என்று கூறியபடியே இணையத்தை பார்த்தபோது விசேட செய்தியாக காணப்பட்டது முரளியின் ஓய்வு.
ஓய்வு பெற வேண்டிய வீரர்கள் இருக்கும்போது முரளி ஓய்வா? இது எனக்குள் மட்டுமன்றி பலரது கேள்வி. என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டே முரளியின் சாதனைப் பக்கங்களை நினைத்துப் பார்த்தேன் முடியவில்லை. ஒன்றா இரண்டா சாதனைகள்? கிரிக்கெட்டில் பந்துவீச்சில் சாதனை என்ற சொல்லின் மறு பெயரே முரளி தான். சோதனைகளை சாதனைகளாக்கிய முரளியின் சாதனைகள் பல. அதை முறியடிப்பதே கடினம்.
1992 இல் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுலகில் அறிமுகமான முரளி 132 டெஸ்ட் போட்டிகளில்792 விக்கெட்டுகளையும் 337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்515 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அதி கூடுதல் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தலை சிறந்த வீரராக ரசிகர்கள் மனதில் என்றும் முதல்வனாக இருக்கிறார்.
இந்தியாவுடன் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே முரளியின் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.அதிலும் விக்கெட்டுகளை சாய்த்து சாதனை வீரனாக ஓய்வு பெற வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு.
முரளியின் சாதனைகளைக் மீட்டிப்பார்த்துப் பதிவிட இப்போது மனம் ஒரு நிலையிலில்லை.
மிக விரைவில் முரளியின் சாதனைப் பக்கங்கள் விரியும்...........
முரளி என்றுமே ஹீரோதான் கிரிக்கெட்டில் .........
0 comments:
Post a Comment