உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட முதலாவது அரையிறுதிப் போட்டியில் உருகுவேயும், நெதர்லாந்தும் மோதின.போட்டி ஆரம்பித்த நேரம் முதல் இரு அணி வீரர்களும் கோலடிக்கும் முனைப்புடன் விளையாடினர்.போட்டியின் 18ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் போட்டு நெதர்லாந்து முன்னிலை பெற்றது. இருந்தாலும் இந்த மகிழ்ச்சி நெதர்லாந்து வீரர்களுக்கு அதிக நேரம் நீடிக்கவில்லை. 41ஆவது நிமிடத்தில் உருகுவேயின் போர்லான் அபாரமான கோலடித்து முதல் பகுதி ஆட்டத்தை சம நிலைக்குக் கொண்டு வந்தார்.
இரண்டாவது பகுதியின் 70ஆவது நிமிடத்தில், வெஸ்லி ஸ்னைடர் நெதர்லாந்துக்கான 2ஆவது கோலையும் 73 ஆவது நிமிடத்தில் அர்ஜன் ராபன் 3ஆவது கோலையும் போட்டு நெதர்லாந்தை முன்னிலைப்படுத்தினர்.90 நிமிட ஆட்டம் முடிந்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் உருகுவே அணியின் பெரைரா 2ஆவது கோலைப் போட்டார். இதனடிப்படையில் முதலாவது அரையிறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதியைப் பெற்றது நெதர்லாந்து.
அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே தென்னமெரிக்க அணியென்ற பெருமையுடன் உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் ஜேர்மனியை எதிர்கொள்கிறது உருகுவே .
இரண்டாவது அரையிறுதியில் ஸ்பெயின் ,ஜேர்மனியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் ஆரம்பம் முதலே, ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஸ்பெயின் அணியினருக்கு பல,கோலடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தும் அவை வீணாகின.முதல்பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 73 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு புயோலால்அடித்தது அதிஷ்டம். ஷேவி அடித்த 'கார்னர் கிக்' பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார் கார்லஸ் புயோல்.இதனால்1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது ஸ்பெயின்.
எப்படியாவது ஒரு கோலையாவது அடித்து சமநிலைப் படுத்த ஜேர்மனி முயன்றும் பலனில்லை. முன்னணி வீரர்களான குளோஸ், பொடோல்ஸ்கி இருவரும் சாதிக்கத் தவற, இறுதியில் ஜேர்மனி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழக்க,ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று,முதன் முறையாக உலக கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஜேர்மனி மூன்றாமிடத்துக்கான போட்டியில் போட்டியில் உருகுவேயை சந்திக்கிறது.
அடுத்த பதிவில் மூன்றாமிடத்துக்கான போட்டி முடிவுகள்.......
0 comments:
Post a Comment