Pages

Tuesday, February 22, 2011


இசை வேந்தனுக்காய்...

விளையாட்டுத் தொடர்பான பதிவுகளுக்கிடையில் இது ஒரு கலைஞனின் மறைவின் காரணமாய் நான் தரும் ஒரு அஞ்சலிப் பதிவு.

கடந்த 20 ஆம் திகதி பிற்பகல் 1.15மணியளவில் பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேஷியா வாசுதேவன் அவர்கள் காலமான செய்தி அறிந்தோம்.அன்று தமிழ் திரையிசைத்துறைக்கு இன்னொரு இழப்பு.
ஒரு ஒலிபரப்பாளராக இருந்து இந்தப் பெயரை நாம் எத்தனை முறை உச்சரித்திருக்கிறோம்.அந்தளவு சிறப்பான இவரின் பல பாடல்களை வானொலிகளில் ஒலிபரப்பியிருக்கிறோம்.

மிகச் சிறந்த பாடகர்களுள் ஒருவரான இவர் சோக,காதல்,துள்ளிசைப் பாடல்களைப் பாடி இசை ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்திருந்தார்.

மலேஷியாவில் 15.06.1915 இல் பிறந்து,சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்து,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 'டெல்லி டு மெட்ராஸ்' படத்தில் தனது குரலின் ஜாலத்தை வெளிப்படுத்தினார்.பின்னர் இசைஞானி இளையராஜா இசையமைத்த பதினாறு வயதினிலே படத்தில் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடலைப் பாடி பிரபல முன்னணிப் பாடகரானார்.

இதன் பின் பல பாடல்களைப் பாடும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது.''ஒரு தங்க ரத்தத்தில்'' ''பூங்காற்று திரும்புமா'' ''வான் மேகங்களே'' ''கோவில் மணியோசை'' ''ஆசை நூறு வகை'' ''காதல் வைபோகமே''போன்ற பாடல்கள் இவர் பெயர் சொல்லும் பாடல்களாக அமைந்தன.

தனது இறுதி அஞ்சலியை செலுத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினி,கமல் படங்களில் பல பாடல்களைப் பாடி இசை ரசிகர்கள் வாயை முணுமுணுக்க வைத்தார்.குறிப்பாக ரஜினிக்குப் பாடிய என்னம்மா கண்ணு (மிஸ்டர் பாரத்) சிங்கம் ஒன்று புறப்பட்டதே (அருணாச்சலம்) போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம்.

ஷங்கர் கணேஷ்,தேவா,ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர் போன்ற இசையமப்பாளர்களின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ள மலேஷியா வாசுதேவன்,ஒரு பாடகராக மட்டுமன்றி,முதல் வசந்தம்,ஊமை விழிகள்,ஒரு கைதியின் டயரி,ஜல்லிக்கட்டு,திருடா திருடா,அமைதிப் படை,பூவே உனக்காக புன்னகை தேசம் போன்ற 80 இற்கு மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

ஷங்கர் கணேஷ்,தேவா,ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர் போன்ற இசையமப்பாளர்களின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ள மலேஷியா வாசுதேவன்,ஒரு பாடகராக மட்டுமன்றி,முதல் வசந்தம்,ஊமை விழிகள்,ஒரு கைதியின் டயரி,ஜல்லிக்கட்டு,திருடா திருடா,அமைதிப் படை,பூவே உனக்காக புன்னகை தேசம் போன்ற 80 இற்கு மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் இவரது பங்களிப்புகளுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார்.

இசையோடு வாழ்ந்த இவர் தனது தனது வழியில் பிள்ளைகளையும் இசையோடு இணைத்துள்ளார்.யுகேந்திரன் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும், பிரஷாந்தினி பின்னணிப் பாடகியாகவும் இருக்கின்றனர்.

இசை வேந்தனின் உயிர் எமை விட்டகன்றாலும் அவரின் கானங்கள் என்றும் எங்கள் காதோரம் ஒலித்துகொண்டேயிருக்கும்.

இசை வேந்தனுக்கு இதய அஞ்சலிகள்!!!

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates