பத்தாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய,பங்களாதேஷ் அணிகள் களம் கண்டன.ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக சச்சின்,ஷேவாக் களமிறங்கி சிறப்பாக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.இவர்களிருவரும் 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்திருந்தபோது,கடினமாக ஒரு ஓட்டத்தை சச்சின் பெற முயற்சித்து ரன் அவுட் (ஷேவாக்கின் தவறினால்) முறையில் வெளியேறி ஏமாற்றினார்.
அதன்பின் ஷேவாக்,விராத் ஹோலி ஆகியோரின் அதிரடி ஆட்டம் தொடர மூன்றாவது விக்கெட்டுக்காக 203 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டது.உலகக் கிண்ணப் போட்டியில் பல சாதனைகளை முறியடித்து முன்னேறிய ஷேவாக்,தனிநபராக உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றவரான முன்னாள் தலைவரான கபில்தேவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முறியடிக்க முடியாமல்140 பந்துகளில் 175 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தனது அறிமுக உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் முதல் போட்டியிலே சதமடித்து அணியில் தனது தெரிவு சரியென்பதை நிரூபித்தார் விராத் ஹோலி.இதன்மூலம் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சுரேஷ் ரைனாதான். இவரடித்த சதத்தின் மூலம் ஹோலிமீது இப்போது அணிக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அண்மைக் காலமாக ஓட்டங்களைப் பெறத் தவறிவரும் ரைனாவின் உலகக் கிண்ண எதிர்காலம் கேள்விக்குறியே.ஒரு சில போட்டிகளில் மட்டுமே இனி இவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போலிருக்கிறது.
இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ஓட்டங்களைப் பெற்று பங்களாதேஷ் அணிக்கு வெற்றியிலக்காக 371 ஓட்டங்களை நிர்ணயித்தது.பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 9 விக்கெட் இழப்புக்கு 283 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. இதன் மூலம் 87 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா தனது வெற்றிக் கணக்கை ஆரம்பித்துள்ளது.
தமீம் இக்பால் 70 ஓட்டங்களையும் சாகிப் அல் ஹசன் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.முனாப் பட்டேல் 4விக்கெட்டை வீழ்த்தினார்.போட்டியின் சிறப்படக்காரர் ஷேவாக்.
பங்களாதேஷின் மிகப் பெரும் தவறு நாணய சுழற்சியில் வெற்றி பெற்றும் முதலில் துடுப்பெடுத்தாடாமையே.
0 comments:
Post a Comment