Pages

Wednesday, August 19, 2009

ஆஷஸ் யாருக்கு

ங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.


லார்ட்ஸில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. ந்தத் தோல்வியிலிருந்து மீண்ட அவுஸ்ரேலியா ஹெடிங்லியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்டில் 3 நாட்களுக்குள் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.


இரு அணிகளும் 1-1 என வென்றுள்ள நிலையில் கடைசி டெஸ்ட் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


2006-07இல் ஏற்கெனவே தொடரை வென்றுள்ளதன் மூலம் இந்த டெஸ்டை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தாலே ஆஷஸ் கோப்பையை அவுஸ்ரேலியா தக்கவைத்துக் கொள்ளும்.
அதேசமயம், கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமானால், இந்த டெஸ்டை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.



ஹெடிங்லியில் வெற்றி பெற்ற அதே அவுஸ்ரேலிய அணியே கடைசி டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு அதிகம்.

இங்கிலாந்து அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ரவி போபராவுக்கு பதிலாக புதுமுக வீரர் ஜொனாதன் டிராட் சேர்க்கப்படுவார்.

காயம் காரணமாக 4ஆவது டெஸ்டில் விளையாடாத பிளின்டாஃப் இந்த டெஸ்டில் விளையாடுவார்.பிளின்டாஃப் விளையாடும் கடைசி டெஸ்ட் என்பதால் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடி அவருக்கு.

ஆஷஸ் யாருக்கு?

Tuesday, August 18, 2009


வீணாகிய எதிர்பார்ப்பு
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் கோலூன்றிப்பாய்தல் போட்டியில் ரஷ்யாவின் எலினா இசின்பயேவா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.


ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.கோலூன்றிப்பாய்தல் போட்டியில் ரஷ்யாவின் எலினா இசின்பயேவா கலந்து கொண்டார்.கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடர்களிலும் தங்கம் வென்று, பல சாதனைகளை படைத்த இவருக்கு தான் இந்த தொடரிலும் தங்க பதக்கம் கிடைக்குமென எதிர்பார்ப்பு. ஆனால் அந்த எதிர்பார்ப்பு வீணாகிப்போனது.

பீஜிங் ஒலிம்பிக்கில் 5.05 மீ உயரம் தாண்டி கோலூன்றிப்பாய்தல் மகாராணியாக முடிசூடிக் கொண்ட இவருக்கு இத்தொடரில் வெண்கலம் பதக்கம் கூட கிடைக்கவில்லை.3 முறையும் இலக்கை எட்ட முடியாமல் பதக்கம் பெறும் வாய்ப்பை நழுவவிட்டார். 4.75 மீ. தாண்டிய போலந்தின் அன்னா ரொகோவ்ஸ்கா தங்கப்பதக்கதைப்பெற 4.65 மீ தாண்டிய அமெரிக்காவின் செல்சியா ஜான்சன் வெள்ளிப்பதக்கதைப்பெற்றார். வெண்கலத்தை போலந்தின் மோனிகா பிரக் தட்டி சென்றார்.

1982 ஜூன் மாதம் 3 ஆம் திகதி பிறந்த இவரின் உயரம் 1.74 மீட்டர். ஒலிம்பிக்கில் அனைவரின் மனதையும் கவர்ந்த இவர் விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.

Sunday, August 16, 2009

அன்வரின் சாதனை தகர்ந்தது

கிரிக்கெட் உலகில் இன்று புதிய சாதனை.கிரிக்கெட் வீரர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.சிம்பாப்வே பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியிலே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே அணியின் சார்ள்ஸ் கவன்ட்ரி என்ற வீரரே அந்த சாதனை நாயகன். இந்திய அணிக்கெதிராக 1997ஆம் ஆண்டு சயீட் அன்வர் படைத்த சாதனையே 12 ஆண்டுகளுக்கு பின் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இவர் 156 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 194 ஓட்டங்களைப் பெற்றார்.

சிம்பாப்வே வீரரொருவர் ஒரு இன்னிங்சில் பெற்றுக்கொண்ட கூடுதல் ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முதல் கிரேக் பிரைன் விஷார்ட் 2003 ஆம் ஆண்டு நமிபியா அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.


இவர் கஷ்டப்பட்டு சதமடித்தும் சிம்பாப்வே அணியால் பங்களாதேஷ் அணியை வெல்ல முடியவில்லை. இதேநேரம் பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் தானும் ஒரு சாதனை வீரன் என்பதை இன்று கிரிக்கெட் உலகுக்கு தனது அதிரடி மூலம் எடுத்துக்காட்டியுள்ளார். இவர் 154 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் வீரர் ஒருவர் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், ஒரு இன்னிங்சில் பெற்ற கூடுதலான ஓட்டங்கள்.


சிம்பாப்வே சென்றுள்ள பங்களாதேஷ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று 4வது போட்டி நடந்தது.
சிம்பாப்வே அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 312ஓட்டங்கள் .
பங்களாதேஷ் அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்களை எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதன் மூலம் பங்களாதேஷ் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. தவிர, அந்நிய மண்ணில் தொடர்ந்து 2வது முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதித்தது. முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான தொடரை வென்றது பங்களாதேஷ்.

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தும் பங்களாதேஷ் வீரர்கள்.

ட்ராவிட் உள்ளே...ஷேவாக் வெளியே....

இலங்கையில் நடைபெறவுள்ள மும்முனை கிரிக்கெட் போட்டி,மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் ராகுல் ட்ராவிட்.காயம் காரணமாக முன்னணி வீரர் ஷேவாக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்புகிறார் ட்ராவிட்.கடைசியாக 2007ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் ட்ராவிட் விளையாடியிருந்தார்.இந்திய துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தும் நோக்கில் ட்ராவிட்டுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடரிலிருந்து தாமாகவே விலகிக் கொண்ட சச்சின், 6 மாதங்களுக்குப் பின் மீண்டும் களமிறங்க உள்ளார். காம்பிருடன் இணைந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அசத்த காத்திருக்கிறார் சச்சின். காயத்திலிருந்து மீண்டுள்ள சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு வருகிறார்.

இந்திய அணியில் 8 துடுப்பாட்டவீரர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள்,2 சுழற்பந்து வீச்சாளர்கள்,1சகலதுறை வீரர் உட்பட 15 வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.

மொத்தத்தில் இந்திய அணி பலமான அணியே. ட்ராவிட் வருகையால் இந்திய எழுச்சி பெறுமா..........

Saturday, August 15, 2009

இசையால் இணைவோம்

வலைப்பதிவில் பதிவிட இப்போது நேரம் எனக்கு வில்லத்தனம்.இருந்தாலும் ஏதோ சண்டை போட்டு இன்று வென்றுவிட்டதால் இந்தப்பதிவு.இது கொஞ்சம்... ஏன் வழக்கத்திற்கு மாறான பதிவு.விளையாட்டு சம்பந்தமான பதிவுகளை அடிக்கடி தந்த நான் இசையைப்பற்றி தரப்போகும் பதிவிது.


இசையின் ஆரம்பத்தைத் தேடுவது மனிதனின் ஆரம்பத்தைத் தேடுவதற்கு ஒப்பானது.மனதிற்கு இதமான ஒலிகளின் சங்கமம் இசை என்றும் சொல்லிக்கொள்ளலாம்.உலகம் முழுவதும் இசையாலே சூழ்ந்துள்ளது என்று சொன்னால் கூட மிகையாகாது.

இலங்கையிலிருக்கும் இசைத்திறமை கொண்ட இளம் சமுதாயத்தின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் உருவானதே"சக்தி வானொலி நட்சத்திரம்".2005இல் சக்தி fm இனால் நடத்தப்பட்ட"சக்தி வானொலி நட்சத்திரம்"போட்டியில் இலங்கையின் பல பாகங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபற்றினர்.இதில்'பிரஷாந்தி'"சக்தி வானொலி நட்சத்திரம்"என்ற மகுடத்தை சூடிக்கொண்டார்.


2007 இல் இசையுலகில்"சக்தி சூப்பர் ஸ்டார்"மாபெரும் வரலாறு படைத்தது.பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களுக்கிடையில் 'சசிகரன்' "சக்தி சூப்பர் ஸ்டார்" என்ற மகுடத்தை சூடினார்.இந்த போட்டியில் பங்குபற்றிய பலரது குரலிலும் பல பாடல்கள் வெளிவந்து அவை இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டன.

இதன் தொடர்ச்சியாய் 2009இல் இசை இளவரசர்கள் போட்டியில்"கீரவாணி"குழு'இசை இளவரசர்கள்'என்ற மகுடத்தை சூடிப் பெருமைகொண்டது.

இப்போது மற்றுமொரு அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்கள்"சக்தி சூப்பர் ஸ்டார்'என்ற பட்டத்துக்காக களத்தில்.யார்"சக்தி சூப்பர் ஸ்டார்...".சிறிது காலம் பொறுத்திருங்கள்.நீங்களே பதில் சொல்லப்போகிறீர்கள்.

இசையுலகில் பல புதுமைகளைப் படைக்கும் சக்தி ஊடக வலையமைப்பின் இந்தத் தேடலில் இனங்காணப்பட்ட பலர் இன்று இசையுலகில் பல்வேறு தடங்களில் தம் திறமைகளை வெளிக்காட்டி ஜொலிக்கிறார்கள்.


இம்முறையும் போட்டியிடும் பலர் இசையுலகில் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான இடத்திலிருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

Thursday, August 13, 2009

ாகிஸ்தானிடம் சுருண்ட இலங்கை
கொழும்பில் நடந்த 20௦-20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அஃப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் இலங்கையை 52 ஓட்டங்களால் வீழ்த்தியது பாகிஸ்தான்.

நேற்று நடந்த போட்டியில்,பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கம்ரான் அக்மல், குலசேகர வீசிய முதல் பந்திலே வெளியேறினார்.எனினும் இம்ரான் நசீர் சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 40 ஓட்டங்களை எடுத்தார். அணித்தலைவர் அஃப்ரிடி அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.இதில் 2 சிக்ஸரும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் திலான் துஷாரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

173 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கையணியின் சனத் ஜெயசூர்யா 23 , சங்ககார 38 ஓட்டங்கள்.ஏனைய வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதன் காரணமாக இலங்கை அணி 18.1 ஓவர்களில் 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் சயீத் அஜ்மல்,நவீத் உல்ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர்களில் தோல்வியடைந்த பாகிஸ்தான் 20௦-20 ௦போட்டியில் அஃப்ரிடி தலைமையில் வெற்றி வாகை சூடியது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஃப்ரிடி தெரிவானார்.

இதேவேளை,இந்தப் போட்டியில் சங்ககாரவின் விக்கெட்டைக் கைப்பற்றிய சயீத் அஜ்மல், சங்ககாரவைப் பார்த்து ஆடுகளத்தை விட்டு செல்லுமாறு சைகை செய்ததால் அவரது போட்டித் தொகையில் 15% அபராதம் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

எது எப்படியாயினும் பாகிஸ்தான் அசத்தலான வெற்றியைப் பெற்றது. இலங்கை அணியின் பலவீனம் மத்திய வரிசை துடுப்பாட்டமே. மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடும் வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்தமையே இலங்கை அணியின் தோல்விக்குக் காரணமெனலாம்.
சரியான தலைமைத்துவத்தை நிறைவேற்றிக் காட்டினார் அஃப்ரிடி.

Wednesday, August 12, 2009



லக நாயகனுக்காக
இன்றைய நாள் சினியுலகில் பொன்னான நாள். இன்றுதான் கலைஞானி கமல்ஹாசன் கலையுலகில் காலடி எடுத்து வைத்த நாள். இன்று அவருக்கு பொன்விழா நாள்.

1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆறு வயதில் "களத்தூர் கண்ணம்மா" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். ஜெமினி கணேசன்-சாவித்ரி தம்பதிகளுக்கு மகனாக அந்தப் படத்தில் நடித்தார். நடித்த முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஜனாதிபதி விருது பெற்றார் கமல்.
களத்தூர் கண்ணம்மாவைத் தொடர்ந்து "பாதக் காணிக்கை","வானம்பாடி","ஆனந்த ஜோதி","பார்த்தல் பசிதீரும்" போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அற்புதமாக நடித்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

1967 இல் டி.கே.எஸ் நாடகக் குழுவில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.கதகளி,குச்சுப்பிடி நடனங்களைக் கற்று நடன நிகழ்ச்சிகளை நடத்தினார்.

"நான் ஏன் பிறந்தேன்","அவள் ஒரு தொடர்கதை" படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்த கமல், "உணர்ச்சிகள்" படத்தில் கதாநாயகனாக நடித்தார்.படம் பாதியில் நின்றுவிட்டது. அதன் பின் "அரங்கேற்றம்"படத்தில் நடித்துப் புகழின் உச்சிக்குச் சென்றார். அதன் பின் "சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் வில்லன் பாத்திரத்தில் அசத்தினார். இதே காலத்தில் மலையாளப் படங்களிலும் நடித்தார்.அங்கும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.கமல் கதாநாயகனாக நடித்து முதல் வெளிவந்த படம் "பட்டம் பூச்சி"." மேல் நாட்டு மருமகள்" படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இதே படத்தில் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமான மும்பை நடிகை வாணியை காதலித்து மணமுடித்தார் கமல்.25 படங்கள் நடித்த பின்னும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் "அபூர்வ ராகங்கள்" படத்தில் நடிக்க இயக்குனர் பாலச்சந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் நடித்த பின்னர் இவர் எங்கோ சென்று விட்டார்.


"மன்மத லீலை","மூன்று முடிச்சு" படங்களும் இவரது நடிப்பால் பேசப்பட்டன. இதைத் தொடர்ந்து கமல் நடித்த "16 வயதினிலே" படம் வெள்ளி விழா கொண்டாடியது. பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து தன நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் கமல்."மூன்றாம் பிறை" இவருக்கு மற்றுமொரு அத்தியாயம் என்றே சொல்லலாம்.

படங்களில் நடித்தது மட்டுமன்றி சில திரைப்படங்களை இயக்கியுமுள்ளார்.பாடகராக பல பாடல்களைப் பாடியுமுள்ளார். மொத்தத்தில் கமல் சகலகலா வல்லவன். இந்திய அரசின் தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்று சாதனைகள் படைத்துள்ளார் உலக நாயகன்.


உலக நாயகனுக்கு ஒரு பதிவு போதாது.பல பதிவுகள் தேவை. இன்னொருமுறை கமலின் பதிவில் சிறப்பான மேலும் பல விடயங்களை எதிர்பாருங்கள்.உலக நாயகனுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் கூறுங்கள்.
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates