அரையிறுதியில் இலங்கை "20-20" உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணி முன்னேறியது. இதனால் நியூஸிலாந்தின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது.
முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் சனத் ஓட்டம் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழந்தார்.அதன் பின் மகேல,தில்ஷான்,சங்கக்கரா ஆகியோரது பங்களிப்பில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களைக் குவித்தது.159 ஓட்டங்களைப் பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 17 ஓவர்களில் 110ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.
"20-20" உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை,மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதப்போகின்றன.
விறுவிறுப்பாக நகருமா "20-20" அரையிறுதிப் போட்டிகள்?
0 comments:
Post a Comment