Pages

Tuesday, June 30, 2009

சனத்துக்கு வயது 40
எனக்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் சனத் ஜெயசூரிய. தனது அதிரடியால் பல சாதனைகளைப் படைத்த சாதனை நாயகனுக்கு இன்று 40 ஆவது பிறந்த நாள்.வாழ்த்துக்கள் சனத்...
சாதனை நாயகனுக்காக இந்தப் பதிவு..............

சனத்தின் பெயரைக் கேட்டாலே எனக்குள் ஒரு உற்சாகம். ஆனால் எதிரணி வீரர்களுக்கு இவர் பெயரைக் கேட்டால் கதி கலங்கும்.

இலங்கையின் தென் பகுதியில் உள்ள மாத்தறை பகுதியில் 30.06.1969 இல் பிறந்தவர் சனத். இவரது முழுப் பெயர் சனத் டேரன் ஜெயசூரிய. 1989ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த சனத் 20 வருடங்களில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஆரம்பத்தில் பின் வரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சனத் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி தனது அதிரடியால் கிரிக்கெட் உலகைக் கலக்கியவர். ஒரு வீரராக மட்டுமன்றி தலைவராகவும் சில காலம் அணியை வழிநடத்திய பெருமையும் இவருக்குண்டு.

சனத்தின் உலக சாதனைகள் சில.............

*அதிக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியமை (432 போட்டிகள்)*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தமை (270 )

*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில்13000 ஓட்டங்களையும் 300 விக்கெட்களையும் கடந்த வீரர் (13151 ஓட்டங்கள், 313 விக்கெட்டுகள்)

*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதி விரைவாக அரைச் சதம் அடித்தமை (17 பந்துகளில்)

*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக வயதான வீரராக இருந்த சமயத்தில் சதம் அடித்தமை.( 39 வருடங்கள் 212 நாட்கள்)

*தலைவராக இருந்த நேரம் ஒரு நாள் சர்வதேச போட்டி ஒன்றில் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றமை (189 ஓட்டங்கள்)

*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக தடவைகள் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை ( 33 தடவைகள்)

இன்னும் இவரது சாதனைகள் பல....சனத்தின் சாதனைகளுக்கு ஒரு பதிவு போதாது. 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது கனவு. அந்தக் கனவு நனவாகவேண்டும் என்பதே என் விருப்பமும். உங்கள் விமர்சனங்களையும் குறிப்பிடுங்கள்.

சாதனை நாயகன் சனத்துக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.....அறுபதிலும் அதிரடி தொடரட்டும்.............

Monday, June 29, 2009

பாப் இசை மன்னனின் மரண பரிசோதனையில் அதிர்ச்சிகள்

பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் பிரேத பரிசோதனையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
உயிர் பிரியும் நேரத்தில் அவரது உடல் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்துள்ளது. பரிசோதனையின்போது, அவரது வயிற்றில் வெறும் மாத்திரைகள் மட்டுமே இருந்துள்ளன.
கடைசிக் காலத்தில் அவரது தலையில் முடிகள் இல்லை. செயற்கை அழகிற்காக 'விக்' பயன்படுத்தி வந்துள்ளார்.
அவரது தொடை,இடுப்பு மற்றும் தோள் பகுதிகளில் ஊசி குத்தப்பட்ட அடையாளங்கள் பல காணப்பட்டன.அவர் தினமும் 3 முறை போதைத்தன்மை உடைய வலிநிவாரண மருந்துகளை பல வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். அதன் விளைவாக அந்த அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன.
அவரது உடலில் அறுவைச் சிகிச்சைத் தழும்புகளும் அதிகம் இருந்துள்ளன. அவர் மொத்தம் 13 முறை அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
அவரது உடலை ஆராய்ந்ததில் ஆரோக்கியமானவராக அவர் இருந்திருக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தினமும் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
1984இல் ஒரு விளம்பர படத்தில் நடித்தபோது அவரது தலைமுடி தீப்பிடித்தது.அதன் அடையாளம் இடது காதோரம் காணப்பட்டது.

கடைசி நேரத்தில் ஜாக்சனின் இருதயத்தை செயற்பட வைக்க 4 ஊசிகள் அவரது இருதயத்திற்கு மேலே மற்றும் அருகே போடப்பட்டுள்ளன. இதில் 3 ஊசிகள் இருதயத்தை மூடியிருக்கும் தசைப் பகுதியை சேதப்படுத்தியுள்ளன. மற்றொன்று நரம்புப் பகுதியை சேதப்படுத்தியுள்ளது.
அவரது முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்புகள் இருந்தன. மேலும், மூக்கின் வலதுபுறம் சற்று தொய்ந்து காணப்பட்டது.

முதுகுப்புறத்தில் வெட்டுக் காயங்கள் இருந்தன. சமீபத்தில் அவர் கீழே விழுந்ததால் இது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜாக்சனின் மூட்டுப் பகுதிகளில் தோலின் நிறம் மாறியிருந்ததாகவும் இது எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய பிரச்சினைகளுடன் மைக்கேல் ஜாக்சன் வாழ்ந்து வந்துள்ளது அவரது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. அவரது உடலில் இப்படி பல தழும்புகள்.....அவரது வாழ்விலும் பல தடைகளைக் கடந்தே இசயுலகிலும் பல திருப்பங்களையும் உருவாக்கினார் ......

பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மறைந்தாலும் அவரது இசை என்றும் எங்கள் அகங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும் ......

Sunday, June 28, 2009

சாதனைக் கனவுடன் ஆன்டி முரே
லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திங்கட்கிழமை 4ஆம் சுற்றுகள் தொடங்கவுள்ளன.
ஆடவர் பிரிவில் பல்வேறு வீரர்கள் பட்டம் வெல்ல முனைந்துள்ள நிலையில் பிரிட்டன் வீரர் ஆன்டி முரே,73 ஆண்டு வரட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க முனைந்துள்ளார். அதாவது 1936-ஆம் ஆண்டு பிரெட் பெரிக்குப் பிறகு எந்த பிரிட்டன் வீரரும் பட்டம் வெல்லவில்லை.
திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்விட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்காவுடன் விளையாட உள்ளார் முரே.
இவரது சாதனைக் கனவு நனவாகுமா......

Friday, June 26, 2009

பாப் சூப்பர் ஸ்டார் மரணம்!
தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்ட பாப் இசையுலகின் சூப்பர் ஸ்டார்,நடனப்புயல் மைக்கேல் ஜாக்ஸன் இன்றுஅதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 50.
தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்ட வர் மைக்கேல் ஜாக்ஸன். 1958-இல் அமெரிக்காவின் இந்தியானாவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970-இல் அந்தக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் அறியப்பட்டார். அப்போது அவரது வயது 12 மட்டுமே.

1972-ஆம் ஆண்டு 'பென்' எனும் பெயரில் தனது தனி ஆல்பத்தை வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான 'தி விஸ்'ஸில் நடித்தார்.
1979-இல் ஆஃப் தி வால் மற்றும் 1982-இல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்று உலகையே வியக்க வைத்த சாதனையாக அமைந்தது.
த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது.

த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்பனை ஆனது. பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே இன்றும் த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.
பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் இசை வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள்
* ஆகஸ்ட் 29,1958இல் அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள கேரியில் பிறந்தார்.
* 1962இல் தன்னுடைய 4 சகோதரர்களோடு இணைந்து ஜாக்சன்5 எனும் இசைக்குழு மூலம் அறிமுகமானார்.
* 1969இல் ஜாக்சன் குழுவுக்கு டெட்ராய்ட் நகரை சேர்ந்த இசைத்தட்டு நிறுவனத்திடமிருந்து முதல் ஒப்பந்தம் கிடைத்தது.
* 1970இல் மைக்கேல் ஜாக்சன் தனியாகப் பாட ஆரம்பித்தார்.
* 1979இல் குவின்சி ஜோன்ஸ் தயாரிப்பில் "ஆப் தி வால்' ஆல்பம் வெளியாகி ஒரு கோடிக்கு மேல் விற்பனையானது.
* 1982இல் திரில்லர் ஆல்பம் வெளியானது. 5.4 கோடி ஆல்பங்கள் விற்பனையாகி அவரை இசையுலகின் மன்னராக்கியது.
* 1984இல் பெப்சி விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இதே ஆண்டில் 8 கிராமிய விருதுகளை வென்று சாதனை படைத்தார்.
* 1985இல் ஏடிவி மியூசிக் எனும் இசை நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதே ஆண்டு 'வி ஆர் த வேர்ல்டு' எனும் பாடலை ஆபிரிக்க வறுமையை போக்குவதற்காக எழுதினார்.
* 1987இல் 'பேட்' எனும் ஆல்பம் வெளியானது. 2.60 கோடிக்கு மேல் விற்பனையானது.
* 1988இல் மைக்கேல் ஜாக்சனின் சுயசரிதை "மூன் வாக்' வெளியானது.
* 1990இல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக அறுவை சிகிச்சை முகமூடி அணிந்து காணப்பட தொடங்கினார்.
* 1992இல் 'டேஞ்சரஸ்' ஆல்பம் வெளியானது.
* 1992இல் 13வது சிறுவனின் தந்தை ஜாக்சன் தன்னுடைய மகனை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
* 1994இல் மைக்கேல் ஜாக்சன் புகழ் பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் மகள் லிசா மேரியை மணந்து கொண்டார்.
* 1995இல் ஹிஸ்டரி ஆல்பம் வெளியானது.
* 1996இல் லிசடா மேரியுடன் விவாகரத்து.
* 1996இல் டெபி ரோ எனும் நர்சை மணந்து கொண்டார். 3 ஆண்டுகள் கழித்து அவரையும் விவாகரத்து செய்தார்.
* 2001இல் 'இன்வின்சிபில்' ஆல்பம் வெளியானது.
* 2002இல் இசைத் தட்டு நிறுவனங்கள் குறிப்பாக கறுப்பினப் பாடகர்களை சுரண்டுவதாக மைக்கேல் ஜாக்சன் போர்க்கொடி எழுப்பினார்.
* அதே ஆண்டு நவம்பர் மாதம் மைக்கேல் ஜாக்சன் ஜெர்மனியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது தன்னுடைய 9 மாத குழந்தை பிரின்ஸ் மைக்கேலை தலைகீழாக தொங்கவிட்டதில் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.
* 2003இல் ஏல நிறுவனம் ஒன்று அவர் வாங்கிய ஓவியங்களுக்கான தொகையை கொடுக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தது.
* இதே ஆண்டு பெப்ரவரி மாதம் மைக்கேல் ஜாக்சன் தொடர்பான செய்திப் படம் வெளியானது. அவருடைய மேலாளர் சம்பள மீதிக்காக வழக்கு தொடர்ந்தார். நவம்பர் மாதம் ஜாக்சனின் கலிபோர்னியா பண்ணை வீட்டில் தேடுதல் நடைபெற்றது. சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் ஜாக்சன் மீது பிடிவிர்ராந்து பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். டிசம்பர் மாதம் அவர் மீது இந்த வழக்கில் அதிகாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டது.
* 2004இல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்று தன் மீதான புகாரை மறுத்தார்.
* 2005இல் ஜாக்சன் வழக்கில் விசாரணை தொடங்கியது. அனைத்து புகாரிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
* 2007-ஆம் ஆண்டு அவரது த்ரில்லர் ஆல்பம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி சிறப்பு ஆல்பம் வெளியிடப்பட்டது.
* இந்த ஆண்டு மார்ச் மாதம் மைக்கேல் ஜாக்சன் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அறிவித்தார். 'இறுதித் திரை' எனும் பெயரில் அந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக தீவிரமாக தயாராகி வந்த நிலையில் மரணமடைந்தார்.

இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.

பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டார் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் எம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.....

Wednesday, June 24, 2009


என்றும் எம்முடன் 'கவியரசர்'

தமிழர்கள் மரபில் எத்தனையோ கவிஞர்கள் தோன்றி மறைந்திருக்கின்றர்கள்.ஆனாலும் தமிழர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய எழுத்துக்களை,பாடல்களை,படைப்புகளை வழங்கியவர்'கவியரசர்' கண்ணதாசன்.

உலகத் தமிழர்களின் அகங்களில் அமர்ந்திருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 82 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

தமிழுலகில் ஆரம்பித்து திரையுலகில் புகுந்து மக்கள் மனங்களை வென்ற ஒரே கவிஞர் 'கவியரசர்' கண்ணதாசன். இவரின் வருகைக்குப் பின்னர் தமிழ்த் திரையுலகில் பாடல்கள் சிறப்புப் பெற்றன.

தனது சிறந்த சொல்லாட்சி,உவமை,சந்தங்கள்,இலக்கிய நயம்,பொருள் நயம் ஆகியவற்றால் சுமார் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தந்தவர் இவர். இன்பம்,துன்பம்,காதல்,பிரிவு,கடமை,சோதனகள்,வேதனைகள் என பல பொருளில் பாடல்களை தந்தமை கண்ணதாசனின் சிறப்பு.

இவரது முதற் பாடல்: 'கன்னியின் காதலி' திரைப்படத்தில் 'கலங்காதிரு மனமே...'

இறுதிப் பாடல் :மூன்றாம் பிறை திரைப்படத்தில் 'கண்ணே கலை மானே....'

கவியரசன் கண்ணதாசன் மறைந்தாலும் அவர் தந்த தமிழ் நயமும் இசை நயமும் திரையிசை வரலாற்றில் தருவது ஒரு தனி நயம்!


Tuesday, June 23, 2009

யூசுபின் 2ஆவது இன்னிங்ஸ்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியிலும் விளையாடுகிறது.
டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் மீண்டும் முகமது யூசுப் சேர்க்கப்பட்டுள்ளார்.டெஸ்ட் போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.சி.எல் போட்டியில் விளையாடியதால் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட முகமது யூசுப் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யூசுப் 79 டெஸ்ட் போட்டிகளில் 6770 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 23 சதங்கள்,28 அரைச் சதங்கள் அடங்கும். 269 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 9242 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 15 சதங்கள்,62 அரைச் சதங்கள்.
யூசுபின் 2 ஆம் இன்னிங்ஸ் இனிதாய் அமையட்டும்.

Monday, June 22, 2009

ICC "20- 20"

இங்கிலாந்தில் இரண்டாவது "20-20"உலகக் கிண்ணப் போட்டிகள் முடிவடைந்த நிலையில்,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலக "20-20" அணியை அறிவித்துள்ளது. இதில், "சூப்பர்-8' சுற்றுடன் வெளியேறிய முன்னாள் சாம்பியனான இந்திய அணியிலிருந்து ஒரு வீரர் கூட தெரிவாகவில்லை. இந்த அணிக்கு பாகிஸ்தானின் யூனிஸ் கான் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானிலிருந்து 4 வீரர்களும் இலங்கை மற்றும தென்னாபிரிக்காவிலிருந்து தலா 3 வீரர்களும் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து 2 வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

ஐ.சி.சி." 20-20" அணி : ஜாக் காலிஸ்,ஏ.பி.டி.வில்லியர்ஸ்,அஃப்ரிடி,கம்ரான் அக்மல்,கெய்ல்,தில்ஷான்,யூனிஸ் கான் (அணித்தலைவர்) பிராவோ, வெய்னி பர்னெல்,உமர் குல்,அஜந்த மென்டிஸ்,மாலிங்க.
எங்கள் மனதிலும் இவர்கள்தான்.....
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates