Pages

Sunday, July 11, 2010

பந்து பறக்குது

உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட அரையிறுதியில் ஸ்பெயினிடம் தோல்வி கண்ட ஜேர்மனி மூன்றாமிடத்தைப் பெற்று ஆறுதலடைந்தது.

மூன்றாமிடத்துக்கான போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ஜேர்மனி,உருகுவே அணிகள் மோதின. 19ஆவது நிமிடத்தில் முல்லர் முதலாவது கோலையடித்து ஜேர்மனியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். இது முல்லர் இத்தொடரிலடித்த 5ஆவது கோல்.



இதன் பின் உருகுவே வீரர்கள் அதிரடியாக விளையாடினர். 28ஆவது நிமிடத்தில் கவானி, கோலடித்து, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.முதல் பகுதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலடித்ததால் போட்டி 1-1 என சமநிலையில் காணப்பட்டது. இரண்டாவது பகுதியின் 51ஆவது நிமிடத்தில் உருகுவே அணியின் போர்லான் ஒரு கோலடித்தார். 56ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் இயான்சன் ஒரு கோலடிக்க,போட்டி 2-2 என மீண்டும் சமநிலையையடைந்தது.

இதனால் மீண்டும் போட்டியில் விறுவிறுப்பேற்பட 82ஆவது நிமிடத்தில் 'கார்னர்-கிக்' வாய்ப்பில் ஓசில் பந்தை அடிக்க,கதிரா தலையால் முட்டி கோலடிக்க ஜேர்மனி 3-2 என முன்னிலை பெற்றது.உருகுவே அணிக்கு இறுதி நேரத்தில் கோலடிக்கும் வாய்ப்புக் கிடைத்தும் அது பலனளிக்கவில்லை.
இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்று மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது.
இரண்டு முறை சாம்பியனான உருகுவே 1970ஆம் ஆண்டின் பின் அரையிறுதி வரை முன்னேறியிருந்தது.
ஜேர்மனி அணியில் முதுகு வலி காரணமாக க்ளோஸ் விளையாடவில்லை. இதனால் பிரேசில் வீரரான ரொனால்டோவின் அதிக கோல்(15) உலக சாதனையை க்ளோஸ்(14) முறியடிக்க முடியலவில்லை.
அடுத்த பதிவு இறுதிப் போட்டியின் முடிவுகளோடு ........

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates