Pages

Wednesday, February 24, 2010

200*

ஒரு சில நாட்கள் பதிவு எதையும் எழுதாமல் இருப்பம் என்ற ஆசைக்கு இடியாய் அமைந்தது சச்சினின் இரடைச்சதம். இந்த இரட்டை சதத்தால் இந்தப் பதிவு.சச்சின் கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் பல. அவற்றுக்காக பல பதிவுகளைத் தந்ததால் இதுவொரு சிறிய பதிவு.
இது எனது150ஆவது பதிவு.
பெப்ரவரி 24, 2010, சச்சின் டெண்டுல்கரின் தினம்.ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் உலகின் தலை சிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் சாதிக்க முடியாதென்று கருதிய இரட்டைச் சதத்தை எடுத்து வரலாறு படைத்த நாள். இந்த நாள் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் மறக்க முடியாதநாள்.அதுவும் சச்சினுக்கு என்றுமே மறக்கமுடியாதநாள்.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியிலே குவாலியரில் இந்த சாதனையைப் படைத்தார் சச்சின்.

தென்னாபிரிக்க பந்து வீச்சை லாவகமாக எதிர்கொண்ட சச்சின் ,90 பந்துகளில் சதத்தை எடுத்து, அடுத்த 57 பந்துகளில் இன்னொரு சதம் எடுத்து, இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்தார். இனி இந்த சாதனையை இப்போதைக்கு யாராலும் முறியடிக்க முடியாதென்பதே எனது கணிப்பு.

இதற்கு முன், சிம்பாப்வே வீரர் சார்ள்ஸ் கவுண்ட்ரி(194*), பாகிஸ்தானின் சயீத் அன்வர் (194) ஆகியோரே அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களாகவிருந்தனர். இந்த வரலாற்றுச் சாதனையை 20 ஆண்டுகாலமாக தனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாகக் குறிப்பிடுகிறார் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற சச்சின்.

சச்சினின் இரட்டை சதத்தால்,குவாலியர் கிரிக்கெட் சங்கம் இந்த மைதானத்தின் பெவ்லியனுக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டவிருப்பதாக அறிவித்துள்ளது.
அண்மைக் காலமாக சதம் குவிக்கும் வீரராக மாறிவரும் சச்சின் இன்னும் பல சாதனைகளை விரைவில் படைப்பார் என்றே தோன்றுகிறது

பிரெட் லீ பற்றிய பதிவை விரைவில் எதிர்பாருங்கள்

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates