ஒரு சில நாட்கள் பதிவு எதையும் எழுதாமல் இருப்பம் என்ற ஆசைக்கு இடியாய் அமைந்தது சச்சினின் இரடைச்சதம். இந்த இரட்டை சதத்தால் இந்தப் பதிவு.சச்சின் கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் பல. அவற்றுக்காக பல பதிவுகளைத் தந்ததால் இதுவொரு சிறிய பதிவு.
இது எனது150ஆவது பதிவு.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியிலே குவாலியரில் இந்த சாதனையைப் படைத்தார் சச்சின்.

இதற்கு முன், சிம்பாப்வே வீரர் சார்ள்ஸ் கவுண்ட்ரி(194*), பாகிஸ்தானின் சயீத் அன்வர் (194) ஆகியோரே அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களாகவிருந்தனர். இந்த வரலாற்றுச் சாதனையை 20 ஆண்டுகாலமாக தனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாகக் குறிப்பிடுகிறார் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற சச்சின்.
சச்சினின் இரட்டை சதத்தால்,குவாலியர் கிரிக்கெட் சங்கம் இந்த மைதானத்தின் பெவ்லியனுக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டவிருப்பதாக அறிவித்துள்ளது.
அண்மைக் காலமாக சதம் குவிக்கும் வீரராக மாறிவரும் சச்சின் இன்னும் பல சாதனைகளை விரைவில் படைப்பார் என்றே தோன்றுகிறது
பிரெட் லீ பற்றிய பதிவை விரைவில் எதிர்பாருங்கள்
0 comments:
Post a Comment