நவம்பர் 18, 19 என் வாழ்நாளில் வழக்கத்திற்கு மாறான நாட்கள்.வித்தியாசமான நாட்கள்.எனது 11 வருட ஊடகத்துறை வாழ்வில் முக்கியமான நாட்கள்.இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கிறேன். கடந்த 2 வருடங்களுக்கு முன் தோன்றிய எண்ணம். தொடர்ந்து 105 மணித்தியாலங்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க வேண்டுமென்பது.ஆனால் அப்போது சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை.அந்த எண்ணத்தின் ஒரு சிறு பகுதிதான் இந்த18,19 ஆம் திகதிகளில் நிறைவேறியது. விரிவாக சொல்லப்போனால் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளை தனி ஒருவனாகத் தொகுத்து வழங்கினேன். இது இலங்கை தனியார் தமிழ் வானொலித்துறையில் முதன் முதல் கூடுதல் நேரம் ஒரு அறிவிப்பாளர், நாள் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய முதல் சந்தர்ப்பமென நினைக்கிறேன்.
கடந்த 2 வருடங்களுக்கு முன் தோன்றிய எண்ணத்தின் சில பகுதியை நிறைவேற்றிக்கொண்ட மகிழ்ச்சி இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்க தொடர்கிறது விரிவாக எனது அனுபவப் பதிவு........ இந்தப் பதிவு தேவைதானா என சிலர் கேட்கலாம். என்ன செய்வது என் வாழ்நாளில் மறக்க முடியாத விடயங்களைப் பதிவிடுவது தவறில்லை என நினைக்கிறேன்.
நேயர்கள் மனதில் என்றுமே முதற்தரமாய் விளங்கும் சக்தி fm இன் 11 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 11 நாட்களும் ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமது எண்ணத்தில் நிகழ்ச்சிகளை வடிவமைத்து நேயர்களுக்கு வழங்கவேண்டுமென்பது நியதி.ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமது எண்ணத்தில், தமக்கு வழங்கப்பட்ட நாட்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினர்.எனக்கான நாள் பத்தாவது நாள்.எனக்குத் தயாரிப்புப் பணியில் அதிக நேரத்தை செலவிட முடியாத நிலை.காரணம் இதைவிட முக்கியமான இன்னொரு நிகழ்ச்சித் தயாரிப்புப் பணி வேறு இருக்கிறது.அதுதான் "சக்தி சூப்பர் ஸ்டார்".எனது நாளுக்கான நிகழ்ச்சிகளை சிறப்பாக வடிவமைத்து வழங்க முடியுமா என்ற கேள்வி மனதில் தோன்றியது.சரி நாள் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நானே தொடர்ந்து தொகுத்து வழங்கினால் எப்படியிருக்கும்..........
என் எண்ணத்தை செயற்படுத்த விளைந்தேன்.எமது நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி மாயாவிடம் சென்று கூறினேன்.'என்ன மயூ தனியாவா' என்று கேட்ட மறு வினாடி' ஓகே செய்யலாமே 'என்றதும் எனது எண்ணம் செயல் வடிவம் பெறப்போகுதே என்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏனைய அறிவிப்பாளர்களுடன் இதைப் பகிர்ந்து கொண்டேன். பலரும் ஆதரவாக எனக்கு அப்போதே வாழ்த்துக் கூற ஆரம்பித்துவிட்டனர்.
மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தபோதும் இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது வீட்டில்.அம்மா இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தார்.ஒருமாதிரிஅம்மாவின் சம்மதத்தைப் பெற்றுவிட்டுத் தயாரானேன். அப்போது இன்னொரு தடையும் காத்திருந்தது. அதுதான் திடீர் காய்ச்சல்.என்ன செய்வது.... மனம் தளரவில்லை.எடுத்த முடிவில் மாற்றமில்லை. நிகழ்ச்சி முன்னோட்டம் '18 மணித்தியாலங்கள் உங்களோடு நான்' என ஒலிபரப்பானது.
காய்ச்சல் குறையவேயில்லை. ஒருநாள் ஓய்விலிருந்துவிட்டு, நவம்பர் 18, காலை 6 மணிக்கு எனது பயணம் வணக்கம் தாயகத்துடன் ஆரம்பமானது .காலை 6 மணி முதல் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பலநூறுக்கணக்கான நேயர்கள் குறுஞ்செய்தி(sms) மூலமும் தொலைபேசி மூலமும் தமது வாழ்த்துக்களை பரிமாறத் தொடங்கினர்.அந்த வாழ்த்துக்கள் காலைப் பொழுதில் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.
காலை 8 மணி முதல்" நம் நாட்டுக் கலைஞர்கள் வாழ்வில் சக்தி fm "என்ற கருப்பொருளில் நம்நாட்டுக் கலைஞர்கள் தம் வாழ்த்துக்களையும் தமது வாழ்க்கையில் சக்தியின் பங்கு எப்படி அமைந்தது பற்றியும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், பாடகர் T.S.முருகேஷ் ,K.மகிந்தகுமார்,நம் நாட்டின் மிகச்சிறந்த தாள வாத்தியக் கலைஞர் ரட்ணம் ரட்ணதுரை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
4 மணித்தியாலங்கள் கடந்துவிட்டன இன்னும் 14 மணித்தியாலங்கள்... எதிர்பார்ப்போடிருங்கள்
மிகுதி விரைவில்.... நேரம் கிடைக்கும்போது தொடரும்
மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தபோதும் இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது வீட்டில்.அம்மா இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தார்.ஒருமாதிரிஅம்மாவின் சம்மதத்தைப் பெற்றுவிட்டுத் தயாரானேன். அப்போது இன்னொரு தடையும் காத்திருந்தது. அதுதான் திடீர் காய்ச்சல்.என்ன செய்வது.... மனம் தளரவில்லை.எடுத்த முடிவில் மாற்றமில்லை. நிகழ்ச்சி முன்னோட்டம் '18 மணித்தியாலங்கள் உங்களோடு நான்' என ஒலிபரப்பானது.
காய்ச்சல் குறையவேயில்லை. ஒருநாள் ஓய்விலிருந்துவிட்டு, நவம்பர் 18, காலை 6 மணிக்கு எனது பயணம் வணக்கம் தாயகத்துடன் ஆரம்பமானது .காலை 6 மணி முதல் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பலநூறுக்கணக்கான நேயர்கள் குறுஞ்செய்தி(sms) மூலமும் தொலைபேசி மூலமும் தமது வாழ்த்துக்களை பரிமாறத் தொடங்கினர்.அந்த வாழ்த்துக்கள் காலைப் பொழுதில் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.
காலை 8 மணி முதல்" நம் நாட்டுக் கலைஞர்கள் வாழ்வில் சக்தி fm "என்ற கருப்பொருளில் நம்நாட்டுக் கலைஞர்கள் தம் வாழ்த்துக்களையும் தமது வாழ்க்கையில் சக்தியின் பங்கு எப்படி அமைந்தது பற்றியும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், பாடகர் T.S.முருகேஷ் ,K.மகிந்தகுமார்,நம் நாட்டின் மிகச்சிறந்த தாள வாத்தியக் கலைஞர் ரட்ணம் ரட்ணதுரை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
4 மணித்தியாலங்கள் கடந்துவிட்டன இன்னும் 14 மணித்தியாலங்கள்... எதிர்பார்ப்போடிருங்கள்
மிகுதி விரைவில்.... நேரம் கிடைக்கும்போது தொடரும்
3 comments:
anna supper,i herd abt 18 hr prg.night mudiyala 19 morning vanakkam thayakam keddathum rompavum santhosam neegka vanakkam kuri end pannunathum.really proud f u &oru Shakthi Fm anoncera etha neegka seithathil sakthi neyarkalakiya egkalukkum perumai.may god bles u.
வாழ்த்துக்கள் ....
//மிகுதி விரைவில்.... நேரம் கிடைக்கும்போது தொடரும்//
அதுக்கும் வாழ்த்துக்கள் ....
arumayaana padhivu kadavul thunai irukkattum
Post a Comment