Pages

Tuesday, April 28, 2009

ஏ.பி.எல்....

இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்), இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகியவற்றைத் தொடர்ந்து ரசிகர்களைக் கவர வருகிறது அமெரிக்கன் பிரீமியர் லீக் (ஏபிஎல்) கிரிக்கெட் போட்டி. ஐ.சி.எல். போல சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத அமைப்புதான் ஏ.பி.எல். என்றாலும் இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டியில் ஒப்பந்தமான ஆஸ்திரேலிய வீரர்கள் ஜேசன் கில்லெஸ்பி, டேமியன் மார்ட்டின் ஆகியோர் அதில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்போட்டி நியூயார்க்கில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.அமெரிக்க விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அமைப்பின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஜே மிர், 6 அணிகளைக் கொண்டு இப்போட்டியை நடத்த முனைந்துள்ளார்.திட்டமிட்டுள்ளபடி போட்டி நடைபெறுமானால், டேமியன் மார்ட்டின் தலைமையிலான பிரீமியம் உலக அணியில் கில்லெஸ்பி இடம்பிடிப்பார். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் வீரர்கள் இப்போட்டியில் விளையாட உள்ளனர்.இதற்கிடையே இந்த அமைப்பில் சேர முனைந்துள்ள வீரர்களுக்கு கிரிக்கெட்ஆஸ்திரேலிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் பெறாத அமைப்பு இது. ஆதலால் விளையாட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் எச்சரிக்கை குறித்தோ, ஐசிசியின் கருத்து குறித்தோ கவலையில்லை என கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.

ம்ம்ம்ம்...... கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.....

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates