காகிதம்
நாம் இப்போது எளிதாகப் பயன்படுத்தி தூக்கி எறியும் காகிதம் எப்படி பிறந்தது?
கி.மு. 200-ல் பழைய துணிகள் மற்றும் மீன் வலைகளைக் கொண்டு காகிதம் தயாரித்தனர். துணிகளைக் கொண்டு செய்யப்படுவதால் இதன் தயாரிப்பு செலவு அதிகமாகவும், அளவு குறைவாகவும் இருந்தது.
300 ஆண்டுகளுக்குப் பிறகு மரப்பட்டைகளையும், தாவர நார்களையும் சேர்த்து காகிதம் தயாரிக்கும் முறையை அறிஞர் சாய் லுன் என்பவர் கண்டுபிடித்தார்.
எனினும் தரமான, மலிவான காகிதம் தயாரிக்கும் சோதனை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. பல நூற்றாண்டுகள் கழிந்தன.
இந்த நிலையில்தான் 18-ம் நூற்றாண்டில் ரெனி டி ரீமர் என்பவர் ஒருவகை குளவியைக் கவனித்தார். அவை, மரத் துணுக்குகளை மென்று அரைத்து பின்னர் அந்தக் கூழைத் துப்பி விடுகின்றன. அந்த கூழை வைத்து அவைகள் வீடு கட்டிக்கொள்வதைக் கண்டார். ஆக, மரக்கூழை நன்கு மசித்தால் நாம் விரும்பும் உருவம் பெறலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு காகிதம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தார் ரெனி டி ரீமர்.
ஆக, காகிதம் தயாரிக்கும் முறை ஒரு குளவியிடம் இருந்து தான் நாம் கற்றுக் கொண்டோம்.
மரத்தை எப்படி சரியாக அரைத்து காகிதம் தயாரிப்பது என்று கெல்லர் என்பவர் கண்டுபிடித்தார்.
ஒரே மரத்தில் இருந்து பல வகையான காகிதங்களைத் தயாரிக்கலாம். அதாவது, ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு வகையான இயந்திரம், வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு விதவிதமான காகிதங்கள் தயாரிக்கப்படுகின்றன
0 comments:
Post a Comment